Advertisment

சபரிமலையை போர் களமாக்க முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ் - பினராயி விஜயன்

சபரிமலை பெண்கள் அனுமதி தீர்ப்பிற்கான மறுசீராய்வு மனுக்களை நவம்பர் 13ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை விவகாரம் பினராய் விஜயன், ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரம் பினராய் விஜயன்

மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட கோவிலின் நடை நேற்று மாலையோடு மூடப்பட்டது. செப்டம்பர் மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் “அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் சென்று ஐயப்பனை வழிபடலாம்” என்று உத்தரவிட்டது.

Advertisment

அந்த உத்தரவினை ஏற்று கடந்து ஐந்து நாட்களில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க நிறைய பெண்கள் முயற்சி செய்தனர். பந்தளம் ராஜ குடும்பம், ஐயப்ப பக்தர்கள், மற்றும் தந்திரி குடும்பத்தினர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்த பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் படிக்க சபரிமலையில் ஏற முற்பட்ட ரெஹானா ஃபாத்திமா யார் ?

சபரிமலை விவகாரம் பினராய் விஜயன் ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு

பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை இழுத்து மூடிவிடுவோம் என்று தலைமை தந்திரி தெரிவிக்க இது விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை மேற்கொண்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

அப்போது சபரிமலை ஐயப்பன் விவகாரம் குறித்து கேள்வி கேட்ட போது சபரிமலையை போர் களமாக்க முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ் என்று சங்பரிவார் இயக்கங்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார் பினராய் விஜயன். மேலும் கேரள அரசோ, கேரள காவல்துறையோ உண்மையான பக்தர்களை தடுத்து நிறுத்தவோ தாக்குதல் நடத்தவோ இல்லை என்பதையும் கூறியிருக்கிறார்.

பந்தளம் குடும்பத்தினர் மற்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் அசோசியேசன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருக்கிறது.

எப்போது விசாரணைக்கு வருகிறது மறுசீராய்வு மனுக்கள் :

இந்த சீராய்வு மனுக்களை நவம்பர் 13ம் தேதி விசாரணை செய்ய இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்திருக்கிறது. ஐயப்பன் கோவில் வருகின்ற நவம்பர் 5ம் தேதி ஒரு முறையும், மீண்டும் நவம்பர் 16ம் தேதியில் தொடங்கி 12 நாட்களுக்கு நடை திறக்கப்படும். அதற்கு முன்னரே மறுசீராய்வு மனுக்களை விசாரணை செய்ய இருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும் படிக்க : செப்டம்பர் 28ம் தேதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த  தீர்ப்பு என்ன?

Pinarayi Vijayan Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment