scorecardresearch

காங்கிரஸ் தலைவர் தேர்தல்; முதல் நபராக வேட்பு மனுக்களை பெற்ற சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்; முதல் ஆளாக வேட்புமனுக்களை பெற்றார் சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்; முதல் நபராக வேட்பு மனுக்களை பெற்ற சசி தரூர்

Manoj C G

அடுத்த மாதம் நடைபெறவுள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதை தெளிவுபடுத்தும் வகையில், மக்களவை எம்.பி சசி தரூர் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஒரு வார கால அவகாசம் திறக்கப்பட்ட உடனேயே வேட்புமனுக்களை பெற்றார்.

திருவனந்தபுரம் எம்.பி.,யான சசி தரூரின் அங்கீகார கடிதத்துடன் சசி தரூரின் பிரதிநிதி ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி ஐந்து செட் வேட்புமனுக்களை வழங்கினார்.

இதையும் படியுங்கள்: மன்மோகன் சிங் அசாதாரணமானவர்.. ஆனால் யூ.பி.ஏ., இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பேட்டி

“வரவிருக்கும் AICC தலைவர் தேர்தலுக்கான ஐந்து வேட்புமனுப் படிவங்களை எனது பிரதிநிதிகளில் ஒருவரான திரு ஆலிம் ஜவேரியுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் சார்பாக இவற்றை பெற்றுக்கொள்ள அவருக்கு நான் அதிகாரம் அளித்துள்ளேன்,” என்று மதுசூதனன் மிஸ்திரிக்கு சசி தரூர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை சசி தரூர் எதிர்கொள்கிறார், அவர் அக்டோபர் 17 ஆம் தேதி தேர்தலில் போட்டியிடப் போவதாக வெள்ளிக்கிழமை முறையாக அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சுவாரஸ்யமாக, வேறு இருவர் வேட்புமனுப் படிவங்களை சேகரிக்க வந்தனர், ஆனால் அவர்கள் மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் பிரதிநிதிகளாகவோ அல்லது யாருடைய ஆதரவையும் கோரவோ இல்லை. இருவரும் தங்களை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டியைச் சேர்ந்த லக்ஷ்மிகாந்த் சர்மா என்றும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பாலைச் சேர்ந்த வினோத் சாரதி என்றும் அடையாளம் காட்டியுள்ளனர். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.

அவர்களின் தோற்றம் தர்த்திபகத்தை நினைவூட்டுவதாக இருந்தது, அவர் பெரிய அல்லது சிறிய என நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியுற்றவர். 1980களில் மறைந்த ராஜீவ் காந்திக்கு எதிராகவும் அவர் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட வந்திருந்தார் என்பதை காங்கிரஸின் பழைய காலத்தினர் நினைவு கூர்கின்றனர்.

AICC தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் காலை 11 மணி முதல் அமர்ந்திருந்த மதுசூதனன் மிஸ்திரி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடையும் நாளான செப்டம்பர் 30 வரை அவர் தினமும் அவையில் இருப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1ம் தேதியும், வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 8ம் தேதியும் இறுதி வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Shashi tharoor gets nomination forms collected for congress president poll

Best of Express