/tamil-ie/media/media_files/uploads/2022/10/Azam-Khan-1200-1.jpg)
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் அமைச்சருமான அசம் கான், வெறுப்பு பேச்சு வழக்கில் ராம்பூர் நீதிமன்றத்தால் வியாழக்கிழமை குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். இந்த வழக்கில் அசம் கான் மற்றும் மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ 2000 அபராதம் விதிக்கப்பட்டது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: அந்தமான் பாலியல் புகார்; 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முக்கிய சாட்சி தகவல்
2019ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அசம் கான் கருத்து தெரிவித்ததற்காக அவர் மீது வெறுப்புப் பேச்சு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் அசம் கான் விடுவிக்கப்பட்டார். அசம் கான் மீது ஊழல், திருட்டு உட்பட 90 வழக்குகள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.