Advertisment

ஆன்லைனில் மது விற்பனை - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்

டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
supreme court guides online liquor sale state government

ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், நேரடியாக விற்பனை செய்வதை தவிர்க்க மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் தூங்கிய 14 தொழிலாளர்கள் ரயில் மோதி பலி, சொந்த ஊர் திரும்பும் போது நடந்த பரிதாபம்

40 நாட்களுக்கும் மேலாக மது கிடைக்காமல் தவித்து வந்த குடிமகன்கள், இப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகம் அடைந்துள்ளனர். மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பல்வேறு கடைகளில் கொரோனா குறித்த அச்சம் எதுவும் இன்றி, குடிமகன்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றுவதில்லை. எனவே மதுக்கடைகள் கொரோனா பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் அபாயம் உள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மது விற்பனை மற்றும் விதிமுறைகள் தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு காணொலி வாயிலாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மது விற்பனை தொடர்பாக அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி அசோக் பூஷன் தெரிவித்தார்.

ஆனால், சமூக விலகல் நடைமுறைகளை பின்பற்றும் வகையில், மறைமுக விற்பனை அல்லது ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மனுதாரரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவு : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு

இதேபோன்று தமிழகத்தில் மதுபானக் கடை திறப்புக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் ரூ.172 கோடிக்கு மது விற்பனையாகி இமாலய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகைக் காலங்களில் விற்கப்படும் அளவுக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Supreme Court Liquor Shops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment