செப்டம்பர் 27 முதல் அரசியலமைப்பு பெஞ்ச் தலைமையிலான வழக்குகளின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று சட்ட செய்தி இணையதளமான பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. சட்ட செய்தி இணையதளம் மேற்கோள் காட்டிய ஆதாரங்களின்படி, உச்ச நீதிமன்றம் விசாரணை நடவடிக்கைகளை யூடியூப்பில் ஒளிபரப்பும் மற்றும் வழக்கு விசாரணைகளை நேரலை ஸ்ட்ரீம் செய்ய அதன் சொந்த தளத்தை விரைவில் உருவாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கூடிய முழு நீதிமன்றக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: யாத்திரையில் இருந்து வெளியேறி சோனியாவை சந்தித்த முக்கிய தலைவர்.. பின்னணி என்ன?
முதன்முதலாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஓய்வு பெற்ற நாளில், என்.ஐ.சி-யின் வெப்காஸ்ட் போர்ட்டலில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பட்டது.
இதற்கிடையில், நேற்றைய முழு நீதிமன்றக் கூட்டத்தின் போது, விசாரணைக்கான வழக்குகளை பட்டியலிடும் புதிய முறையை நீதிமன்றம் மாற்றியமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மதிய உணவுக்குப் பிந்தைய இரண்டு மணி நேரத்திற்குள் புதிய விஷயங்களைக் கேட்பதற்கு மாறாக, செவ்வாய் மதியம் கேட்கப்படாத புதிய விஷயங்கள் புதன் மற்றும் வியாழன் பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
புதிய பட்டியல் முறை, அதிகரித்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், புதிய விஷயங்களை விரைவாகப் பட்டியலிடுவதை உறுதி செய்வதற்கும் ஒரு முயற்சியாகக் காணப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil