/tamil-ie/media/media_files/uploads/2019/03/D2H1bl2U4AAQjzD.jpg)
Three CRPF jawans killed
Three CRPF jawans killed : ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் உதம்பூரில் அமைந்துள்ளது சி.ஆர்.பி.எஃப் முகாம். வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களில் ஒருவர் தன்னுடைய சக வீரர்கள் மூவரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார். மூவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மூவர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தின் பொகர்மால், டெல்லி மௌஜ்பூரின் யோகேந்தர் சர்மா மற்றும் ஹரியானா ரெவரியின் உமீத் சிங் என மூவர் உயிரிழப்பு. கான்ஸ்டபிள் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் பட்டாலியன் எண் 187ல் நடந்துள்ளது. மேலும் யார் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணையும் இனிமேல் தான் நடத்தப்படும் என ராணுவ வட்டாரம் அறிவித்துள்ளது.
இது குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று காவல் தரப்பு கூறியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் சி.ஆர்.பி.எஃப் உயர் அதிகாரிகள் மற்றும் எஸ்.எஸ்.பி. ராஜீவ் பாண்டேவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசியதில் ஒருவர் பலி.. . 32 பேர் படுகாயம்..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.