`ராஜா ராணி' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Advertisment
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆல்யா மானசா, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `இனியா' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல, சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `கயல்' தொடரில் நடிக்கிறார்.
ஆல்யா, சஞ்சீவ், அவரது தாய், தம்பி, சஞ்சீவின் மகன், மகள் என இவர்களது குடும்பம் பல ஆண்டுகளாக 1.5 bhk வீட்டில் தான் வசித்து வந்தனர்.
இப்போது பல ஆண்டுகளாக கடின உழைப்பின் பலனாக தாங்கள் கட்டிய புது வீட்டில்,ஆல்யா சஞ்சீவ் தம்பதி குடும்பத்துடன் குடியேறி உள்ளனர்.
சினி சமூகம் யூடியூப் சேனலில் வெளியான இவர்களது வீட்டின் கிரக பிரவேச வீடியோ, பலரையும் கவர்ந்துள்ளது.
’கோயம்புத்தூர்ல ரொம்ப கஷ்டப்பட்டு சொந்த வீடு வாங்குனோம். ஆனா என் அப்பாவோட மருத்துவ செலவுக்காக அதை வித்துட்டு, ஒரு 4 லட்சத்தோடு தான் சென்னைக்கு வந்தோம். அப்போ நாங்க வெறும் ஜீரோவா தான் இருந்தோம்.
அந்த காசுல தான் சென்னையில குத்தகைக்கு வீடு வாங்கி வாழ்க்கைய ஆரம்பிச்சோம்.
இப்போ எங்க புது வீட்டுக்கு வீட்டுக்கு ’ஹசானா சிராஜ்’ என் அம்மா அப்பா பேரு வச்சுருக்கோம். இதை வைக்க சொன்னது ஆல்யா தான்.
இந்த வீடு கட்டும் போதே டபுள் ஹைட் சீலிங் வேணும் நாங்க பிளான் பண்ணோம். வீட்டுக்குள்ள வந்த உடனே எல்லாரும் முதல்ல மேலதான் பார்ப்பாங்க.
வீடு முழுக்க நிறைய கிளாஸ் மிரர்ஸ் இருக்கும். இந்த வீட்டோட ஆர்கிடெக்ட், இன்டிரியர் டிசைனர்னு நான்தானு பெருமையா சொல்லுவேன்’ என்று சஞ்சீவ் அந்த வீடியோவில் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“