bigg boss fame kajal selfie with ananda kannan christmas - ஒரு காலத்தில் தமிழ்ப் பெண்கள் மத்தியில் இவர் அகில உலக ஃபேமஸ் - வைரலாகும் காஜல் செல்பி
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் மாஸாக காட்டிக் கொள்ள நினைத்து டஸ்ஸானவர் காஜல். ஷோவில், நான் ரொம்ப கோபக்காரி, என் எதிரில் யாரும் நின்று பேச முடியாது என்ற மோடில் பேசியே ஆடியன்ஸை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
Advertisment
இவரது ட்விட்டர் பேஜில் நேற்று வெளியான புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, பிரபல விஜே-வாக இருந்த ஆனந்த கண்ணனுடன் செல்பி எடுத்து அதை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
#MerryChrismas ❤ Have a fantablessed santablessed day ????
சோழ சாம்ராஜ்யத்தில் சன் மியூசிக் சேனலில் டாப் விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன். இவருடன் பேசுவதற்காகவே அப்போது பெண்கள் போனும் கையுமாக இருந்த வரலாறெல்லாம் ஆய்வகத்தில் உள்ளது.
கிராமியக் கலைகள் மீதான ஆர்வத்தால் சிங்கப்பூரில் குடியேறிய ஆனந்த கண்ணன், தான் கற்ற பாரம்பர்ய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள், கதைகள் வாயிலாக அந்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார்.
சிங்கப்பூரில் 'ஆனந்தக் கூத்து' என்ற பயிற்சி அமைப்பின் மூலம் கிராமியக்கலைகளை சொல்லிக் கொடுக்கிறார். இதுவரை 85,000 மாணவர்கள் இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்று அவரே கூறியிருக்கிறார்.
சரி விஷயத்துக்கு வருவோம்....
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, ஆனந்த கண்ணனும், காஜலும் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அதை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள காஜல், ஆனந்த கண்ணனுடன் சிறந்த தருணங்கள், லவ்யா" என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.
சாண்டி மாஸ்டருடன் இணைந்து வாழ்ந்த காஜல், பிறகு அவரை விட்டுப் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news