குக்கரில் சமைத்தால் எந்த சத்துக்களும் இருக்காதா? டாக்டர் அருண்குமார் 'நச்' பதில்

இன்றைய சூழலில் அனைவருக்கும் சாப்பாடு குக்கரில் தான் சமைக்க தெரியும் ஆனால் அப்படி சமைத்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

இன்றைய சூழலில் அனைவருக்கும் சாப்பாடு குக்கரில் தான் சமைக்க தெரியும் ஆனால் அப்படி சமைத்தால் உடலுக்கு நல்லதா கெட்டதா என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
arunkumar

சமையலறை உலகில், பிரஷர் குக்கர் ஒரு சர்ச்சைக்குரிய கருவியாகவே பார்க்கப்படுகிறது. "பிரஷர் குக்கரில் சமைத்தால் சத்துக்கள் அழிந்துவிடும்", "அது உணவை 'அணு குண்டு' போல் வெடிக்கச் செய்கிறது" போன்ற பல கட்டுக்கதைகள் பரவலாக உள்ளன. ஆனால் இந்த கூற்றுக்கள் உண்மையா? பிரஷர் குக்கர் குறித்த சந்தேகங்களை டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கி கூறுகிறார். 

Advertisment

பிரஷர் குக்கர் என்பது மனிதகுலத்தின் மிக மோசமான கண்டுபிடிப்பு என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. நேரம், எரிபொருள் மற்றும் சக்தியை சேமிப்பதற்காகவே பிரஷர் குக்கர் உருவாக்கப்பட்டது. அதிக வெப்பம் மற்றும் அதிக அழுத்தத்தில் மிகக் குறைந்த நேரத்தில் உணவை சமைக்க இது உதவுகிறது.

அரிசியில் அமைலோஸ் மற்றும் அமைலோபெக்டின் என்ற மாவுச்சத்துக்கள் உள்ளன. இதில் சுமார் 10% தானியத்தின் வெளிப்புறத்திலும், 90% உட்புறத்திலும் உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கும். கஞ்சி வடித்து சாதம் சமைக்கும்போது, வெளிப்புறத்தில் உள்ள 10% மாவுச்சத்து தண்ணீரில் கரைந்துவிடும். இதனால் மாவுச்சத்தின் அளவு ஒரு 10% குறையலாம். ஆனால், மாவுச்சத்து முழுவதும் மறைந்துவிடும் என்பது உண்மையல்ல. நீரிழிவு நோயாளிகள் கஞ்சி வடித்த சாதம் சாப்பிட்டால் சர்க்கரை அளவு பயங்கரமாக குறையும் என்று நினைப்பது தவறு அது ஒரு 10% வரை மட்டுமே குறைய வாய்ப்புள்ளது.

ஒரு பொருளை சாதாரணமாக வேகவைக்கும்போது, அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் 'லீச்சிங்' (Leaching) என்ற செயல்முறை மூலம் தண்ணீரில் கலந்துவிடும். உதாரணமாக, கைக்குத்தல் அரிசி அல்லது கருப்பு கவுனி அரிசியை கஞ்சி வடித்து, அந்த தண்ணீரை ஊற்றிவிட்டால், நீங்கள் எதிர்பார்த்த சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நீரை நீங்கள் அருந்தினால் மட்டுமே சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். காய்கறிகளை வேகவைக்கும்போதும், நீரை வடித்துவிட்டால் சத்துக்கள் குறைபாடு ஏற்படும்.

Advertisment
Advertisements

பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பிரஷர் குக்கரில் குறைந்த நேரத்தில் சமைப்பதால், சத்துக்கள் அதிகம் உடைந்து அழிவதில்லை. மேலும், தண்ணீரை நாம் வெளியேற்றாததால், பெரும்பாலான சத்துக்கள் உணவிலேயே தக்கவைக்கப்படுகின்றன. எனவே, பிரஷர் குக்கரில் சமைத்தால் சத்துக்கள் அனைத்தும் போய்விடும் அல்லது அழிந்துவிடும் என்பது ஒரு மிகப்பெரிய தவறான தகவல் என்கிறார் டாக்டர் அருண்குமார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: