Crispy dosa in tamil: நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக தோசை உள்ளது. இந்த அற்புதமான தோசையில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக மொறுமொறு கிரீஸ்ப்பி தோசை பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது.
Advertisment
கடைகளில் வழங்கப்படும் மொறு மொறு தோசை போல நம்முடைய வீடுகளிலும் தயார் செய்ய நாம் முயலுகையில் அவை நாம் எதிர்பார்த்தது போல் வருவதில்லை. இதற்கு நாம் பயன்படுத்தும் மாவு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தோசை மாவை நாம் பக்குவமாக அரைக்கும் போது தோசை நாம் நினைத்ததை விட அற்புதமாக வரும். அந்த அளவிற்கு பக்குவமாக எப்படி மாவு அரைக்கலாம் என்று இப்போது பார்ப்போம்.
முதலில் புழுங்கல் அரிசியை எந்த கப்பில் அளந்து எடுத்துள்ளீர்களோ அதே கப்பில் மற்றவற்றையும் அளந்து கொள்ளவும்.
பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு ஊற வைத்துக்கொள்ளவும். குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கலாம்.
அவை நன்கு ஊறிய பின்னர், மிக்ஸி அல்லது கிரைண்டரில் இட்டு 90 சதவிகிதம் அரைத்துக்கொள்ளவும்.
மாவு நன்கு புளித்து வந்தததும் தோசைக்கல்லில் எப்போதும்போல மெல்லிசாக மாவை ஊற்றி, எண்ணெய் அல்லது நெய் தடவி திருப்பாமல் அப்படியே எடுத்தால் ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு தோசை கிடைக்கும்.
சாதாரணமாக இட்லி மாவில் மற்றும் கடலை பருப்பு பச்சரிசி சேர்க்க மாட்டோம். அதேபோல், இட்லி மாவில் தோசை ஊற்றுவதற்கும், தனியாக இப்படி மாவு அரைத்து தோசை ஊற்றுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளதை நீங்கள் பார்க்க கூடும்.
இந்த சிம்பிள் குறிப்பை பயன்படுத்தினால் நிச்சயம் மொறுமொறு தோசை கிடைக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்தமான சட்னி, சாம்பார்களுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“