/indian-express-tamil/media/media_files/2025/05/07/oNMF2aomhv417k9ECV8f.jpg)
பொதுவாக நமக்கு மிக எளிதாக கிடைக்கும் கீரை வகைகளில் முதன்மையானதாக முருங்கைக் கீரை விளங்குகிறது. இதனால் முருங்கைக் கீரையை பெரும்பாலானவர்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். எனினும், முருங்கைக் கீரையை குறைவான அளவு மட்டுமே நம்மால் சாப்பிட முடியும் என்று உணவியல் நிபுணர் தாரிணி கூறுகிறார்.
ஏனெனில், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது. மேலும், இதில் தேங்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து சமைத்தால் தான் நம்மால் சாப்பிட முடியும். இல்லையென்றால் அடை தோசையுடன் சேர்த்து இதனை சாப்பிடலாம். மேலும், சிலர் முருங்கைக் கீரையில் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள்.
முருங்கைக் கீரையை ஃப்ரெஷ்ஷாக மட்டுமே சாப்பிட வேண்டும் என்று உணவியல் நிபுணர் தாரிணி பரிந்துரைக்கிறார். தற்போது, முருங்கைக் கீரையை உலக அளவில் பிரபலம் அடையச் செய்து அதிகளவில் விற்பனை செய்கின்றனர். இதில், நார்ச்சத்து மட்டுமின்றி, கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன.
எனினும், செரிமானம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் முருங்கைக் கீரை சாப்பிடுவதை தவிர்த்து விடலாம் என்று உணவியல் நிபுணர் தாரிணி அறிவுறுத்துகிறார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே முருங்கைக் கீரையை சாப்பிடலாம் என்றும் அவர் கூறுகிறார்.
இது தவிர குழந்தைகளுக்கும் முருங்கைக் கீரையை கொடுக்க கூடாது. இரண்டரை வயதைக் கடந்த குழந்தைகளுக்கு மட்டும் ஒரு ஸ்பூன் அளவில் முருங்கைக் கீரையை கொடுக்கலாம் என்று உணவியல் நிபுணர் தாரிணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் எவ்வளவு சத்தான உணவாக இருந்தாலும், அளவோடு தான் சாப்பிட வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
நன்றி - Doctor Vikatan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.