நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்
இரவு நேர பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
இரவு நேர பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
இன்றைய சூழலில் ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரும் இரவு நேர பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஊடகம், ஐடி என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களின் வேலை இரவு நேரத்தில் இருக்கிறது.
Advertisment
பொருளாதார தேவை முதல் பணியில் முன்னேற்றம் வரை என்று நிறைய காரணங்களுக்காக இரவு நேர பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. இதற்காக எத்தனை காரணங்களை கூறினாலும், உடல்நலம் பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கூடுமானவரை இரவு நேர பணியில் இருந்து விடுபட வேண்டும் என்பது தான் வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது. ஆனால், இந்த பணியில் இருக்கும் வரை நம்முடைய ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க வேண்டும்.
அதன்படி, இரவு நேர பணியில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் குறித்து மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்தியுள்ளார். இவற்றை தொடர்ச்சியாக செய்யும் போது நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
உதாரணமாக காலை சுமார் 5 அல்லது 6 மணிக்கு உங்களது இரவு பணி நிறைவடைகிறது என்றால், வீட்டிற்கு சென்று கட்டாயமாக சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அப்போது தான் உடல் சோர்வு நீங்குவதற்கு உதவியாக இருக்கும்.
எனினும், அதற்கு மேல் தூங்காமல் சரியாக அலாரம் வைத்து 7 மணி நேரத்திற்கு பின்னர் விழித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு விழித்ததும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஏனெனில், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதனால், சரியான அளவு தண்ணீர் குடித்திருக்க மாட்டோம்.
அதனடிப்படையில், நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அடுத்தபடியாக, புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது நம் உடல் இழந்த சக்தியை மீட்டெடுக்க உதவி செய்யும். அதன் பின்னர், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறையை பின்பற்றும் போது நம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.