New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/28/iiXS00ce0DfY85QKLlbM.jpg)
சரியாக தூக்கம் வராமல் இருப்பது ஒரு பிரச்சனை என்றால், தேவையில்லாத நேரத்தில் தூக்கம் வருவதும் பிரச்சனை தான். அந்த வகையில் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு படிக்கும் போது அதிகமாக தூக்கம் வரும். இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமாக வயிறு நிறைய சாப்பிடுவது அமைகிறது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். உணவை நிறைய சாப்பிடுவதை விட, உடலுக்கு உறுதியளிக்கும் விதமாக சாப்பிட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
ஏனெனில், நிறைய சாப்பிட்டு விட்டால் அதனை செரிமானம் செய்வதற்கு உடல் வேலை செய்யத் தொடங்கும். இதனால் மற்ற வேலைகளில் நம்மால் முழுமையாக ஈடுபட முடியாது. இது தவிர படிக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கு பிராணாயாமம் பயிற்சி உதவி செய்வதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அதில் கபாலபதி என்ற பயிற்சியை செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். மூக்கின் இரு துவாரம் வழியாகவும் மூச்சை வேகமாக வெளியிடுவதை கபாலபதி பயிற்சி என்று கூறுவார்கள். இவ்வாறு செய்யும் போது தூக்கம் வரும் தன்மை உடனடியாக கட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தூக்கம் வரும் போது கபாலபதி பயிற்சியை வேகமாக 10 முதல் 15 முறை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது நம்மை உடனடியாக உற்சாகப்படுத்துகிறது. இதனால் பார்க்கும் வேலையில் நம்மால் முழுமையாக ஈடுபட முடிகிறது.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.