மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சரியான தீர்வா? விளக்கும் டாக்டர் மதிவாணன்
மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து மற்றும் பத்திய சாப்பாடு சரியான வைத்திய முறையா என்பது குறித்து விளக்கும் டாக்டர் மதிவாணன், எல்லா மஞ்சள் காமாலைகளுக்கும் ஒரே மருந்து கிடையாது என்று விரிவாக விளக்குகிறார்.
மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து மற்றும் பத்திய சாப்பாடு சரியான வைத்திய முறையா என்பது குறித்து விளக்கும் டாக்டர் மதிவாணன், எல்லா மஞ்சள் காமாலைகளுக்கும் ஒரே மருந்து கிடையாது என்று விரிவாக விளக்குகிறார்.
ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்றால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் மதிவாணன் விளக்கமாகக் கூறியுள்ளார்.
மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து மற்றும் பத்திய சாப்பாடு சரியான வைத்திய முறையா என்பது குறித்து விளக்கும் டாக்டர் மதிவாணன், எல்லா மஞ்சள் காமாலைகளுக்கும் ஒரே மருந்து கிடையாது என்று விரிவாக விளக்குகிறார்.
Advertisment
பலரும் மஞ்சள் காமாலை நோய் என்றால் நாட்டு மருந்து சாப்பிட்டால் சரியாகும் என்ற ஒரு மனநிலை நிலவுகிறது. இது குறித்து டாக்டர் கார்த்திக் மதிவாணன் தனது யூடியூப் சேனலில், மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து மற்றும் பத்திய சாப்பாடு சரியான வைத்திய முறையா, எல்லா மஞ்சள் காமாலைகளுக்கும் ஒரே மருந்து கிடையாது என்று விரிவாக விளக்குகிறார்.
மேலும், ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்றால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் மதிவாணன் விளக்கமாகக் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
டாக்டர் கார்த்திக் மதிவாணன் கூறுகையில், “உடலில் கல்லீரல் பாதிப்பினால், ஏற்படக்கூடியதுதான் மஞ்சள் காமாலை. அது ஒரு அறிகுரியாக தெரியும். உதாரணத்துக்கு, ஜுரத்துக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது, மலேரியா, டெங்கு, டைபாய்டு, கொரோனா வைரஸ் என எல்லாவற்றுக்கும் ஜுரம் இருக்கும். பல வைரஸ் கிருமிகள் அறிகுறியாக தெரியும். அதே மாதிரி தான் மஞ்சள் காமாலையும். எல்லா ஜுரத்துக்கும் ஒரே சிகிச்சை கிடையாது, அதே மாதிரி எல்லா மஞ்சள் காமாலைக்கும் ஒரே ஒரு மருந்து கிடையாது.
நிறைய பேரு நாட்டு மருந்துதான் மஞ்சள் காமாலைக்கு சரியான வைத்திய முறை என்று நினைத்துக்கொண்டு, எல்லாரும் நாட்டு மருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார்கள். ஆனால், எல்லா நாட்டு மருந்துகளும் மஞ்சள் காமாலைக்கு தீர்வு கொடுக்க முடியாது.
சிலருக்கும் கல்லீரலில் புற்று நோய் இருந்தாலும் அதன் அறிகுறி மஞ்சள் காமாலையாகத் தான் வெளிப்படும். கணையத்தில் புற்றுநோய் இருந்தாலும் அதன் அறிகுறி மஞ்சள் காமாலையாகத்தான் வெளிப்படும். அளவுக்கு அதிகமாக மது குடிப்பவர்கள், ஃபேட்டி லிவர் (கொழுப்பு படிந்த கல்லீரல்) இருப்பவர்களுக்கும் மஞ்சள் காமாலை அறிகுறியாக வெளிப்படலாம். அதனால், ஒருவருக்கு மஞ்சள் காமாலை இருக்கிறது என்றால், ஒரு கல்லீரல் மருத்துவரைப் போய் பாருங்கள். மஞ்சள் காமாலை உள்ளவருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படும், மேலும், ஒரு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டு கல்லீரலில் என்ன பாதிப்பு இருக்கிறது என்று அறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிப்பார்கள். அதனால், ஒருவருக்கு மஞ்சள் காமாலை என்றால் நாட்டு மருந்து சரியான தீர்வு கிடையாது. உடனடியாக கல்லீரல் மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் நல்லது” என்று டாக்டர் கார்த்திக் மதிவாணன் கூறுகிறார்.