தினசரி நாம் செய்யும் பணிகளை விரைவாக முடிப்பதற்கான டிப்ஸ் என்ன என்று இணையத்தில் தேடுவோம். அது போன்று சில டிப்ஸை இதில் காணலாம்.
தோசைல் கல் கொண்டு முருங்கை கீரையை உருவும் முறை:
முருங்கைக் கீரைக்கட்டு முழுவதும் மறையும் அளவிற்கு கட்டைப் பை அல்லது அரிசிப் பையை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரைக் கட்டை பைக்குள் வைத்து நன்றாக சுற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர், சுற்றிய பை மீது கனமான இரும்பு தோசைக் கல்லை வைக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு பிறகு தோசைக் கல்லை அகற்றிவிட்டு, பைக்குள் வைத்து முருங்கைக் கீரையை உதறினால், தண்டில் இருந்து கீரை வந்துவிடும்.
கல் உப்பு கொண்டு குடம் கழுவும் முறை
சிறிது அளவு கல் உப்பு மற்றும் அரிசி மாவு அல்லது கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சிறிது நீரில் சேர்த்து பசை போன்று மாற்றிக் கொள்ள வேண்டும். இதைக் கொண்டு குடத்தை கழுவினால் அதிகளவில் தண்ணீர் செலவளிக்க வேண்டாம். குடமும் பளிச்சென மாறிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“