Advertisment

சென்னை ஸ்பெஷல் ப்ரிஞ்சி… ருசியின் சீக்ரெட் சொல்லும் வெங்கடேஷ் பட்!

Chef Venkatesh Bhat tips on Chennai style Brinji recipe in tamil: சுவையான மற்றும் ஆரோக்கியமான ப்ரிஞ்சி சாதத்தை எப்படி எளிய முறையில் செய்யலாம் என குக் வித் கோமாளி புகழ் சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பாட் கூறும் சில முக்கிய சீக்ரெட்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy food Tamil News: Chef Venkatesh Bhat tips on Chennai style Brinji rice

Healthy food Tamil News: பிரியாணி சாப்பிடாத மற்றும் பிடிக்காத நபர்களுக்கு ப்ரிஞ்சி ஒரு வர பிரசாதம் எனலாம். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் அதே மசாலாக்கள் தான் பிரியாணியிலும் சேர்க்கப்படுகின்றன. இதன் சுவையை ஒருமுறை ருசித்தவர்கள் கண்டிப்பாக அடிக்கடி சாப்பிட நினைப்பார்கள். அதிலும் சென்னை பகுதியில் கிடைக்கும் ப்ரிஞ்சி சாதத்தின் சுவையே தனித்துவமானது தான்.

Advertisment

இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான ப்ரிஞ்சி சாதத்தை எப்படி எளிய முறையில் செய்யலாம் என குக் வித் கோமாளி புகழ் சமையல் வல்லுநர் வெங்கடேஷ் பாட் கூறும் சில முக்கிய சீக்ரெட்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

ப்ரிஞ்சி செய்ய தேவையான பொருட்கள்

நெய் - 1 கப்

ப்ரிஞ்சி இலை - 4

அண்ணாச்சி பூ - 4

சோம்பு - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 (இரண்டாக நறுக்கியது)

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்

தக்காளி - (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டீ ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்

தேங்காய் பால் - 1 கப்

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

அரிசி - பாஸ்மதி அல்லது சீராக சம்பா

புதினா, கொத்தமல்லி இலைகள்

நீங்கள் செய்ய வேண்டியது

முதலில் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து அதில் 2 முதல் 3 ஸ்பூன் நெய் விடவும். பிறகு ப்ரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ, சோம்பு ஆகியவற்றை சேர்த்து நெய்யில் பொரிய விடவும். அதோடு நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயைச் சேர்த்து கிளறி விடவும். பிறகு இவற்றோடு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதங்கும்படி வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பிறகு, 2 டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள 2 தக்காளிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் ஆகிய மசாலாக்களை சேர்த்து மீண்டும் வதக்கவும். அவற்றோடு புதினா, மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து கிளறவும்.

இப்போது 15 நிமிடம் ஊறவைத்துள்ள பாஸ்மதி அல்லது சீராக சம்பா அரிசியில் உள்ள தண்ணீரை வடிகட்டிய பிறகு, நாம் வதக்கி வைத்துள்ள மசாலாவோடு சேர்க்கவும். சேர்த்த பிறகு ஒரு சிறிய கரண்டியால் அரிசி உடையாமல் கிளறி விடவும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். அவற்றோடு 1:2 என்ற விகிதத்தில் தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும். பிறகு மெதுவாக கிளறி விட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

15 நிமிடங்களுக்கு பிறகு இந்த கலவையோடு வறுத்த முந்திரி, எண்ணெயில் வறுத்த பிரட் பீஸ் மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை சேர்க்கவும்.

இந்த ப்ரிஞ்சி சாதத்திற்கு தம் போட, ஒரு பெரிய தோசைக் கல் எடுத்து அதன் மீது ப்ரிஞ்சி செய்த பாத்திரத்தை எடுத்து வைக்கவும். அவற்றை சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடலாம். பிறகு திறந்து பார்த்தல் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சென்னை ஸ்பெஷல் ப்ரிஞ்சி தயாராக இருக்கும்.

நீங்களும் ஒருமுறை முயற்சிக்கலாமே மக்களே!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Tamil Food Recipe Tamil Recipe Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment