'நம் தேசியக்கொடி' யை கண் இமையாய் காப்போம்; கண்ணுக்குள் ஓவியமாய் வரைந்த தேசப் பற்றாளன்

கண்ணுக்குள் ஓவியமாய் தேசியக் கொடியை வரைந்த தேசப்பற்றாளன்; 75 சுதந்திர தின விழிப்புணர்வுக்காக கோவை ராஜா புது முயற்சி

கண்ணுக்குள் ஓவியமாய் தேசியக் கொடியை வரைந்த தேசப்பற்றாளன்; 75 சுதந்திர தின விழிப்புணர்வுக்காக கோவை ராஜா புது முயற்சி

author-image
WebDesk
New Update
'நம் தேசியக்கொடி' யை கண் இமையாய் காப்போம்; கண்ணுக்குள் ஓவியமாய் வரைந்த தேசப் பற்றாளன்

Kovai man draw national flag inside his eye: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் யு.எம்.டி ராஜா தன் கண் விழிகளில் தேசியக்கொடி வரைந்து சாதனை படைத்துள்ளார்.

Advertisment

publive-image

இதையும் படியுங்கள்: அண்ணாமலையைப் பார்த்து தமிழகத்தில் மற்ற கட்சிகள் பயப் படுகின்றன: சி.டி ரவி

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. எனவே இது இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண் முட்டை ஓட்டின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும் முட்டை ஓட்டிற்கும் இடையே காணப்படும் மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து, அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளேன். இவ்வாறு செய்வதால் கண் விழிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதனை மேற்கொண்டேன், என தெரிவித்தார்.

Advertisment
Advertisements

publive-image

இது தவிர, யு.எம்.டி ராஜா 300 கிராம் தங்கத்தில் தேசியக் கொடி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

P.ரஹமான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Independence Day Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: