/indian-express-tamil/media/media_files/2025/05/10/OB8Ot8tEgdnbINIc6JxO.jpg)
விந்தணு சுத்தமாக இல்லையா? பாலுடன் இந்தப் பொருள் சேர்த்து குடிங்க: டாக்டர் யோக வித்யா
பொதுவாக தம்பதிகள் குழந்தை பேற்றை விரும்பினால் கூட சில சமயங்களில் அது அவ்வளவு எளிதாக நடப்பதில்லை. மலட்டுத்தன்மை குறைபாடு என்பது குழந்தை பேற்றில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. சில தம்பதிகள் வருடக்கணக்கில் முயற்சி செய்தும் கூட பலன் என்பது கிடைப்பதில்லை. இதில் ஆண்களின் கருவுறாமைக்கு முக்கிய காரணமாக அசோஸ்பெர்மியா என்பது உள்ளது. அசோஸ்பெர்மியா என்பது விந்தணுக்கள் இல்லாத நிலை ஆகும்
உடல் வெப்பம் அதிகரித்தல், சிறுநீர் அடக்கி வைத்தல், சரியான நேரத்தில் மலம் கழிக்காதது, மலச்சிக்கல் பிரச்னை போன்ற பிரச்னைகளில் ஆண்களின் விதைப்பையின் வெப்பம் அதிகரிக்கிறது.இதனால் அசோஸ்பெர்மியா ஏற்படவாய்ப்புள்ளது. கசப்பான உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல், பாகற்காய், வேப்ப இலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையினை பூஜ்ஜியமாக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் யோக வித்யா.
இறுக்கமான உள்ளாடைகளை விட காட்டன் ட்ரவுசர் போன்ற தளர்வான உள்ளாடைகளைப் பயன்படுத்துவது விந்தணுக்களின் எண்ணிக்கையை சிறப்பாக வைத்திருக்கும். இவை தவிர சிகரெட், மது போன்ற போதை பழக்கங்களை தவிர்க்க அறிவுறுத்துகிறார் மருத்துவர் யோக வித்யா. டெஸ்டிஸ்க்கு போதுமான அளவுக்கு ரத்த ஓட்டம் போகாமல் ஒரு வகையான வெப்பம் உருவாகி விந்தணுக்கள் எண்ணிக்கை குறைகிறது. மன அழுத்தமும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்பதால் அதிக மன அழுத்தம் கூடாது. இது தவிர, இரவில் கண்விழிப்பதால், நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமாகிறது. ஆகையால் தாமதமாக தூங்கும் பழக்கத்தை கண்டிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இரவுப் பணியில் இருப்பவர்கள், காலை பணியில் மாறுவது நல்லது என்கிறார் மருத்துவர் யோக வித்யா.
உடல் உஷ்ணம் குறைய வாரத்திற்கு 3 முறை ஆயில் பாத், அதாவது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சித்த மருத்துவத்துல கொடுக்கக்கூடிய மருந்துகள் மூலமாக 7 உடல் தாதுக்களையும் விருத்தி அடைய வைத்து விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம். 3 முதல் 6 மாதங்கள் ஹெர்பல் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கும்போது விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் யோக வித்யா. இதற்கு அன்றாட உணவில் கசப்பான உணவுகள், சோயா போன்றவற்றை தவிர்த்து அவகேடோ என்று சொல்லக்கூடிய பட்டர் ஃப்ரூட், மில்லட்ஸ், செவ்வாழை, ஸ்ட்ராபெரி சேர்த்துக் கொள்ளலாம். பாலில் தேன் கலந்து காலை இரவு என 2 வேளைகளில் குடிக்கலாம் என்கிறார் மருத்துவர் யோக வித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.