Healthy Tips in Tamil : இந்தியாவில் வீதி எங்கும் காணப்படும் முருங்கை மரம், ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வருகிறது. முருங்கை இலையை காய வைத்து, பொடியாக்கி, காலை வேளையில், தேநீரில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்.
Advertisment
முருங்கை இலைப் பொடியானது, தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
மேலும், எடை குறைப்பை முருங்கை இலைத் தேநீர் ஊக்குவிக்கிறது. முருங்கை இலையை உணவில் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் போது, அவற்றில் உள்ள சத்துகள் உடலில் கொழுப்பு சேமிப்பை குறைத்து, ஆற்றல் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துகளை மிகுதியாக கொண்டவை. முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளதால், அவை இதயத் தமனிகள் தடிமனாக இருப்பதைத் தடுக்க உதவுகிறது.
Advertisment
Advertisements
மேலும், இதில் ஆக்ஸிஜனேற்ற குளோரோஜெனிக் அமிலம் உள்ளதால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. முருங்கையில் வைட்டமின் சி மிகுதியாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு காரணமாகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதால், தோல் மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்தவும் முருங்கை இலை உதவுகிறது.
இருப்பினும், முருங்கை இலை பசுமையாக கிடைத்து வந்தாலும், அதன் மருத்துவப் பலன்களை அறிந்து, பல நிறுவனங்களும் முருங்கை இலையை காய வைத்து, பொடித்து, முருங்கை இலை பொடி என பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும், உடல் நலன் என வரும் போது, ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பசுமையான முருங்கை இலைகளையே பயன்படுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”