PONGAL recipe in tamil: பொங்கலில் விதவிதமான பொங்கல்கள் உள்ளன. அந்த வகையில் ரவை பொங்கலும் ஒன்று. சில வகை பொங்கல்கள் உண்பதால் நமக்கு சோர்வு ஏற்பட்டு தூக்கம் வரும். ஆனால் இந்த வகை பொங்கல் சுவையானதாகவும் சுறுசுறுப்பையும் தரும். இப்படிப்பட்ட சுவையான ரவை பொங்கல் எப்படி தாயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
ரவை பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்
ரவை – 2 கப்
பச்சைப் பருப்பு – அரை கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தாளிக்க:-
நெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
மிளகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
ரவை பொங்கல் செய்முறை :
முதலில் வெறும் பாத்திரத்தில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின்னர் அதே பாத்திரத்தில் ரவையைப் போட்டு சூடு வர வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவிவிட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்து, ஒரு கப் ரவைக்கு இரண்டே கால் கப் தண்ணீர் என ஊற்றி கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
மீண்டும் ஒரு கொதி வந்ததும் ரவையை சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவை முழுவதையும் சேர்த்த பிறகு, நன்றாகக் கிளறிவிட்டு 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.
இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும். நீண்ட நேரம் அடுப்பிலேயே இருந்தால் ரவை பொங்கலுக்குப் பதில் ரவை உப்புமாவாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள சுவையான ரவை பொங்கலுடன் தேங்காய் சட்னி அல்லது சாம்பார் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“