Poori Masala recipe in tamil: தற்போதைய காலகட்டத்தில் காலை நேரச் சிற்றுண்டியாக பெரும்பாலும் பூரி தயாரிக்கப்படுகின்றது. இவற்றுக்குக்கென பல வகை குருமா தயார் செய்து கொடுக்கப்பட்டாலும் பூரி கிழங்கு மசாலா தான் எப்போதும் அல்டிமேட்டாக இருக்கும். தவிர, இந்த உருளை கிழங்கு குருமா சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பப்படுகிறது.
Advertisment
இந்த அற்புதமான சைடு டிஷ் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
உருளை கிழங்கு குருமா தயார் செய்யத் தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு - 2 எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 2 தேக்கரண்டி உலர் சிவப்பு மிளகாய் - 2 இஞ்சி - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை
Advertisment
Advertisements
பூரி கிழங்கு மசாலா செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் தோல்களை உரித்து மசியல் போல் பிசைந்து கொள்ளவும்.
இப்போது தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அவை சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதில் கடுகு தூவி பொரிந்ததும் சீரகம், கடலை பருப்பு சேர்த்து சில வினாடிகள் வறுத்து கொள்ளவும். தொடர்ந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்த பிறகு இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இஞ்சியின் பச்சை வாடை போனதும் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு ( 3 - 4 நிமிடம் போதுமானது) மசக்கி வைத்துள்ள கிழங்கை சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 முதல் 6 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக விடவும். அவை நன்கு வெந்தவுடன் அவற்றின் மேல் கருவேப்பிலை தூவி கீழே இறக்கவும்.
இந்த சுவையான பூரி கிழங்கு மசாலா சூடாக தயார் செய்து வைத்துள்ள பூரியுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.