Rice cooking in tamil: வளர்ந்து வரும் இன்றைய உணவு கலாச்சாரத்தில் சாதம் வடிப்பதற்கென பல படிநிலைகள் வந்துள்ளன. இதில் குக்கரில் வடிப்பது ஒரு முறையாகும். ஆனால், குக்கரில் சாதம் வடிக்கும் முறைக்கு சிலரால் மாற்றிக்கொள்ள முடிவதில்லை. காரணம் சாதம் குழைந்து விடும், அரிசி போல் இருக்கும், சாதம் விறைப்பாய் இருக்கும் என்கிறார்கள்.
Advertisment
ஆனால், இந்த எளிய செய்முறை மூலம் குக்கரில் பூப்போல உதிரியான சாதம் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
குக்கரில் உதிரி சாதம் எளிய செய்முறை
Advertisment
Advertisements
குக்கரில் சாதம் தயார் செய்யும்போது, அரிசியை ஒரு 10 நிமிடங்களுக்கு ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அரிசியை நன்கு அலசிக்கொள்ளவும். 3 முறை நன்கு அலசிவிட்டு 1 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் அளவு தண்ணீர் வைக்கவும்.
எந்த டம்ளரில் அரிசியை அளந்தீர்களோ அதே டம்ளரில்தான் தண்ணீர் வைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றியதும் அதில் சமையல் எண்ணெய் 1 ஸ்பூன் விடவும்.
பின்னர் ரப்பர், பிரஷர் குக்கர் மூடி போட்டு நன்றாக மூடிவிடவும்.
விசில் போடாமல் மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வைக்கவும். குக்கரில் தண்ணீர் பிரஷர் அடிக்கும்போது விசில் போட்டு மூடவும்.
விசில் 3 முறை சத்தம் விட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு, உடனே குக்கர் மூடியை திறக்காமல் அடுப்பிலேயே விட்டுவிடவும்.
குக்கரின் பிரஷர் தானாக இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறந்து பார்க்கவும்.
இப்போது ஒரு கரண்டியால் சாதத்தை கிளறவும். சாதம் பூப்போல் வெந்திருக்கும்.
நீங்கள் பயன்படுத்துவது புதிய அரிசியாக இருப்பின் 2 1/2 டம்ளர் தண்ணீர் போதுமானது. பழைய அரிசியாக இருந்தா 3 டம்ளர் ஊற்றலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“