சாதம் வடித்த கஞ்சியில் இதை சேர்த்து குளிங்க… முடி உதிர்தல் குறையும்; டாக்டர் மைதிலி

சாதம் வடித்த கஞ்சியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் லேசாக உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் முற்றிலும் தீரும். நாள் முழுவதும் புத்துணர்சி கிடைக்கும்.

சாதம் வடித்த கஞ்சியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் லேசாக உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் முற்றிலும் தீரும். நாள் முழுவதும் புத்துணர்சி கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
Rice water benefits

சாதம் வடித்த கஞ்சியில் இதை சேர்த்து குளிங்க… முடி உதிர்தல் குறையும்; டாக்டர் மைதிலி

தினந்தோறும் நாம் வடிக்கும் சாதத்தின் கஞ்சி தண்ணீரை வீணாக சிங்கிள் கொட்டி வருகிறோம் ஆனால் அதில் இருக்கும் சத்துக்கள் சாதத்தில் இருக்கும் சத்துக்களை விட அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அரிசியை ஒன்றிரண்டு முறை அலசினால் போதும். அரிசியை கழுவுகிறேன் என்று நிறைய முறை தண்ணீரை ஊற்றி கழுவினால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிப்போகும். இப்படி அரிசி கழுவும் தண்ணீர் மற்றும் சாதம் வடித்த தண்ணீரை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்? என்ற ரகசியத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

சாதம் வடித்த கஞ்சியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் லேசாக உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் பிரச்னைகள் முற்றிலும் தீரும். நாள் முழுவதும் புத்துணர்சி கிடைக்கும். உடலில் இருக்கும் உஷ்ணம் தணிந்து உடலை குளிர்ச்சி அடைய செய்யும் இதனால் உடல் சூட்டால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீரும். உடலில் நீரின் அளவு குறையும்போது நீர்க் கடுப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அடிவயிற்றில் அதீத வலியும், சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படும். இப்படியான பிரச்னைகளும், வெள்ளை படுதல் பிரச்சனை, கண் எரிச்சலும் தீர தினமும் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் மைதிலி.

ஹைபோகிளைசிமியா இருப்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியை ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தொடர்ந்து வெதுவெதுப்பான சூட்டில் 30 நாட்கள் குடித்து வருவதால், உடலுக்கு தேவையான எனர்ஜி ஸ்டாமினா கிடைக்கிறது. இந்த ஹைபோகிளைசிமியா நோய் பாதிப்போட அறிகுறிகளை குறைப்பதற்கும் உதவியாக இருக்கிறது. வடிச்ச கஞ்சியை தொடர்ந்து குடிச்சிட்டு வருவதால், புற்றுநோய் செல்களையெல்லாம் எதிர்த்து போரிடும். இதனால எந்த வகை புற்றுநோயும் ஏற்படாமல் தடுத்து ஆரோக்கியமாக வாழ்றதுக்கு உதவியா இருக்கும். இதனால், புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறைவு என்கிறார் மருத்துவர் மைதிலி.

நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் பெரும்பாலும் சிகைக்காய் பயன்படுத்துவது தான் வழக்கம். சிகைக்காய் உடன் தண்ணீர் சேர்க்காமல் வடித்த கஞ்சி தண்ணீரை சேர்ப்பது உண்டு. இந்த கஞ்சி தண்ணீருடன் சிகைக்காய் கலந்து தலைக்கு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்னை, நரை முடி பிரச்னை, வறட்சி, அடர்த்தி குறைவு ஆகிய அனைத்து பிரச்னைகளும் தீரும். பெரும்பாலானோருக்கு உணவு முறை மாற்றத்தின் காரணமாக தலை முடியின் அடர்த்தி குறைகிறது. இவர்கள் இந்த முறையில் தலைக்கு அலசினால் ஒரே மாதத்தில் இழந்த முடி மீண்டு அடர்த்தியாக வளரும் என்கிறார் மருத்துவர் மைதிலி.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: