Advertisment

கிராமத்து கருவாட்டுப் பிரியாணி: இப்படி செஞ்சுப் பார்க்கவே இல்லைல..!

Briyani making:கிராமத்து கருவாட்டு ஆசையில் இருப்பவர்கள் இப்படி சுவையான கருவாட்டு பிரியாணியை செய்து ருசித்து சாப்பிடுங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிராமத்து கருவாட்டுப் பிரியாணி: இப்படி செஞ்சுப் பார்க்கவே இல்லைல..!

Samayal kurippu tamil, Village karuvadu briyani video: பிரியாணி எத்தனையோ வகை சாப்பிட்டு இருப்பீங்க! கருவாட்டுப் பிரியாணி சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? அதுவும் கிராமத்து ஸ்டைலில் வஞ்சிரம் கருவாடு வாங்கி சமைத்தால்? நாக்கில் எச்சில் ஊறுதுல்ல...

Advertisment

உண்மையில் கருவாட்டையும்கூட நாம் குழம்பு, வருவல், தொக்கு செய்தே சாப்பிட்டுப் பழகியிருப்போம். கருவாட்டுப் பிரியாணி பலருக்கு அனுபவம் இருக்காது. கருவாட்டு பிரியாணியை கிராமத்து ஸ்டைலில் சுலபமாக எப்படி செய்வது? என இங்கே பார்க்கலாம்.

Village karuvadu briyani video:: கிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி

கருவாட்டுப் பிரியாணிக்கு தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - அரை கிலோ, வஞ்சிரம் கருவாடு - அரை கிலோ, வெங்காயம் - அரை கிலோ, பழுத்த தக்காளி - அரை கிலோ, பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - 6, காஷ்மீரி சில்லி - 2 தேக்கரண்டி, தயிர் - ஒரு கோப்பை, கொத்துமல்லித் தழை - ஒரு கொத்து, இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, புதினா - ஒரு கொத்து, பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2, பிரியாணி இலை - 2, உப்பு தூள் - தேவையான அளவு, எண்ணெய் - 200 மில்லி, நெய் - 50 மில்லி, எலுமிச்சை - அரை பழம்

கருவாட்டு பிரியாணி செய்முறை:

அரிசியை கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும். அதேபோல கருவாட்டையும் நன்றாக கழுவி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஈரம் போக காய விடுங்கள். தொடர்ந்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.

பின்னர் உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும். அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிடுங்கள். கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும். பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.

இப்போது சுவையான கருவாட்டு பிரியாணி தயார். கிராமத்து கருவாட்டு ஆசையில் இருப்பவர்கள் இப்படி சுவையான கருவாட்டு பிரியாணியை செய்து ருசித்து சாப்பிடுங்கள்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment