Advertisment

சிறுதானிய உணவுகளுக்கு எப்போதும் தனி ”மவுசு” தான்; குதிரைவாலி சாம்பார் சாதம் செய்வது எப்படி?

Kuthiraivaali sambar saatham in tamil: பச்சையம் இல்லாத சிறுதானியமாக உள்ள குதிரைவாலி அரிசி உடலில் தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sambar Rice recipe in tamil: steps for Barnyard millet in tamil

Sambar Rice recipe in tamil: புல்லுச்சாமை அல்லது சாமை என்று அழைக்கப்படும் இந்த குதிரைவாலி அரிசி ஒரு புன்செய் பயிராகும். இவற்றை ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்றும் அழைக்கபடுகிறது.

Advertisment

இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அதோடு கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.

பச்சையம் இல்லாத சிறுதானியமாக உள்ள இந்த குதிரைவாலி அரிசி உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் இவற்றில் அதிகமாக உள்ளன.

publive-image

அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது.

இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள குதிரைவாலி அரிசியில் சாம்பார் சாதம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி (அ) சாமை அரிசி - 4 கப்,

பீன்ஸ், கேரட் - 250 கிராம்,

கத்திரிக்காய், தக்காளி - தலா 50 கிராம்,

காய்ந்த மிளகாய் - 8,

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா - ஒரு கப்,

சின்ன வெங்காயம் - 10,

முருங்கைக்காய் - 2,

புளி - நெல்லிக்காய் அளவு,

உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு,

சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

முதலில் குதிரைவாலி அரிசியை தண்ணீரில் கழுவி நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு புளியை நன்றாக கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் துவரம் பருப்பு மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.

தொடர்ந்து தனியாக அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலை விட்டுக் கொதிக்க வைக்கவும்.

அதன் பிறகு, அதில் ஊறவைத்த குதிரைவாலி அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். பின்னர் 7 1/2 கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

அரிசி வெந்து குழைந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவி கீழ் இறக்கவும்.

இப்போது இந்த சுவையான குதிரைவாலி சாம்பார் சாதத்தை ருசித்து மகிழவும்.

publive-image

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Healthy Food Food Receipe Tamil Food Recipe Tamil Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment