Detecting Adulteration sugar tamil: நாம் அனைவரும் சிறந்தவை என்று நினைக்கும் பிராண்டுகளிலிருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குகிறோம். ஆனால் சில நேரங்களில் இந்த பொருட்கள் கலப்படம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், மேலும் புற்றுநோய் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று உணவவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
நாம் உண்ணும் உணவுப்பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சில எளிய குறிப்புகளை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், நாம் அன்றாட பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் ஒன்றான சர்க்கரை கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய FSSAI சமீபத்தில் ஒரு ஹேக்கைப் பகிர்ந்துள்ளது.
நாம் அன்றாட பயன்படுத்தும் சர்க்கரையில் கலப்பட பொருளாக யூரியாவை பயன்படுத்துகிறார்கள். நம்முடைய சர்க்கரையிலும் அப்படி யூரியா கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி கண்டறியலாம் என இங்கு பார்க்கலாம்.
சர்க்கரையில் உள்ள கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?
முதலில் சிறிது சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அவற்றை கண்ணாடி அல்லது சாதாரண டம்ளரில் ஊற்றியுள்ள தண்ணீரோடு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும்.
எப்படி தெரிந்து கொள்வது?
நீங்கள் கரைத்து வைத்துள்ள சர்க்கரை தண்ணீரில் அமோனியா வாசனை இல்லை என்றால், அது கலப்படமற்றது.
அமோனியா வாசனை தெரிந்தால் அது கலப்படம் செய்யப்பட்டது.
அம்மோனியா வாசனையை எப்படி தெரிந்து கொள்வது?
அம்மோனியா, நிறமற்ற வாயு, நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் கலவை ஆகும். இது சிறுநீர் அல்லது வியர்வை போன்ற கடுமையான வாசனையைக் கொண்டுள்ளது.
இந்த வாயு கலவை இயற்கையாகவே நீர், மண் மற்றும் காற்றில் காணப்படுகிறது, மேலும் இது தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உடலிலும் காணப்படுகிறது என்று மருத்துவநியூஸ்டுடே.காம் கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“