Tamil Health Update : இந்திய வீடுகளில் ஒவ்வொரு சமையல் அறையிலும், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகளை பெற முடியும். சமையலில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களும் ஒவ்வொரு வகையில் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த நன்மைகளை தருகிறது.
பழங்காலங்களில், இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், யூரிக் அமில அளவு, இரத்த சோகை சிகிச்சை மற்றும் முடி உதிர்வதைத் தடுப்பது போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஆரோக்கியமான உணவு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் நம் வீட்டு சமையல் அறையில்பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருட்களில ஒன்றாக வெந்தயம் பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.
ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, வைட்டமின் ஏ, பி6, சி, கே போன்ற பல ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக, உள்ள வெந்தயம் பல மருத்துவ ஆய்வுகள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அதிக செயல்திறன் கொண்டுள்ளது.
மேலும் உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த பயன்படும் வெந்தயத்தில், கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
வெந்தய விதைகளின் நன்மைகள்
வெந்தய விதைகள் பசி மற்றும் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. அவை தாய்ப்பாலை சுரப்பதையும் ஆதரிக்கின்றன.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதிலும், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
வெந்தய விதைகள் முடி உதிர்தல், நரை முடி மற்றும் யூரிக் அமில அளவுகளை (கௌட்) குறைக்க உதவுகிறது. அவை இரத்தத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமும் இரத்தத்தை நச்சுத்தன்மையற்றதாக ஆக்குவதன் மூலமும் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி, வீக்கம், முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்தப் பகுதியிலும் வலி போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தய விதைகள் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுகிறது.
இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு எரிச்சல் மற்றும் உடல் பருமன் போன்ற கபா கோளாறுகளைப் போக்க உதவுகின்றன.
உணவில் வெந்தய விதைகளை சேர்பபது எப்படி?
1-2 தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவில் ஊறவைத்து, காலையில் விதைகளை சாப்பிடுங்கள் அல்லது தேநீராக குடிக்கலாம்
1 டீஸ்பூன் வெந்தய பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு முன் அல்லது இரவில் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள்.
விதைகளை பேஸ்ட் செய்து அதை தயிர் / கற்றாழை ஜெல் / தண்ணீரில் சேர்த்து தலையில் தடவ பொடுகு, முடி உதிர்தல், நரை முடி குறையும்.
கருவளையங்கள், முகப்பரு, முகப்பரு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றில் ரோஸ் வாட்டருடன் தயாரிக்கப்பட்ட வெந்தய பேஸ்ட்டைப் பயன்படுத்துவது பெரிய நன்மைகளை அளிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “