கோடை காலம் வந்துவிட்டால் போதும் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் சூடு.இதனை தடுக்கவும், இதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் பலரும் தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். இதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால் இந்த எண்ணெயில் குளித்தால், உடல் சூடு வரவே வராது என்ற டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
Advertisment
பொதுவாக உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு, சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான வழிமுறை தான், எண்ணெய் குளியல். இதற்கு பல மருத்து வழிமுறைகளும் இருக்கிறது. அதிலும் உள் மற்றும் புற மருந்து என இரு வகைகள் உள்ளது. புற மருத்துவத்தில் முக்கியமானவது மசாஜ் தெரபி. இந்த தெரபி செய்யும்போது எண்ணெய் ரொம்ப ரொம்ப முக்கியம். வெளிப்புறத்தில் பயன்படுத்தக்கூடிய தைலங்கள், நமக்கு பல வழிகளில் நன்மை தருகிறது.
இதில் நாம் எளிதாக அதிகம் பயன்படுத்தும் முறை எண்ணெய் குளியல். பொதுவாக எண்ணெய் குளியல் என்றால் நல்லெண்ணெய் தான் சொல்வார்கள். வாரத்தில் இருமுறை ஆண் பெண் யாராக இருந்தாலும் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். எண்ணெய்யை காய்ச்சி உடலில் தேய்ப்பார்கள். வாரத்தில் ஒருமுறையாவது இதனை செய்ய வேண்டும். உடல் முழுவதும் எண்ணெய் தேய்க்கவில்லை என்றாலும் தலையில் மட்டுமாவது எண்ணெய் வைத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த எண்ணெய் குளியல் செய்தால், உடலில் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் குணமாகும். எலும்பு தொடர்பான நோய்கள் மூட்டு வலி, குதிகால் வலி, தோல்பட்டை இணைப்பில் வலி, அனைத்தும் சரியாகும். உடலில் வாதம் அதிகமாக இருந்தால் அதற்கு நல்லெண்ணெய் குளியல் தான் சிறந்தது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.