நீளமான, அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தல் எல்லோருக்குமே ஒரு கனவுதான். ஆனா இன்றைக்கு இருக்கும் வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்களால முடி உதிர்வு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது, இந்த பிரச்னையில் காரணமாக பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இளம் வயதினர் பலரும் முடி உதிர்வு மற்றும் இளநரை பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
Advertisment
இந்த பிரச்னைகளுக்கு பல விதமாக ஆயில்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தினாலும், பிரச்னை முழுமையாக தீர்ந்ததா என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் சொல்வார்கள். அதே சமயம், முடி உதிர்வை கட்டுப்படுத்தி புதிய முடியை வளர வைக்க இயற்கையில் பல மருத்துவங்கள் இருக்கிறது. இது குறித்து டாக்டர் பொன் அண்ணாதுரை கூறியுள்ளார்.
முடி வளர்வதற்கு ரத்தம் சரியாக செல்ல வேண்டியது அவசியம். ரத்தஓட்டம் அதிகரிக்க வேண்டும். அதில் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் இவை அனைத்தும் சரியாக இருந்தாலும், முடி வளர்வதற்கு இவற்றை எப்படி கொண்டு செல்வது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். முடி அடர்த்தியாக வளர நீங்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.
கருங்சீரகம் 100 கிராம், கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் 100 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, சீரான தீயில் நனறாக வேக வைத்து, இவற்றை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இந்த பொருட்களை வேக வைக்கும்போது அதில் இருந்து இறங்கிய எஸன்ஸை உச்சந்தலையில் நன்றாக தெய்த்துக்கொள்ள வேண்டும். தேய்த்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிட வேண்டும்.
Advertisment
Advertisements
அதேபோல் வெந்தயத்தை அறைத்து செம்பருத்தி பூ, அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து ஷேம்புவாக பயன்படுத்தி குளிக்கலாம். நட்ஸ் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் ரோலிங் சீப்பை எடுத்துக்கொண்டு நன்றாக அழுத்தி சீவ வேண்டும். இப்படி சீவினால், முடிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இப்படி செய்யும்போது 15 நாட்களுக்குள் முடி உதிர்வு குறையும் என்று கூறியுள்ளார்.