கால், கை-க்கு இடையில் மரு, கட்டி... கிராம்பு பேஸ்ட் உடன் இத தொட்டு: டாக்டர் தீபா டிப்ஸ்
மருக்கள் பொதுவாக கைகள், விரல்கள், கால்கள் மற்றும் உள்ளங்கால்களில் பொதுவாகக் காணப்படும். சருமத்தின் வெளிப்புற அடுக்கின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகின்றன.
மருக்கள் பொதுவாக கைகள், விரல்கள், கால்கள் மற்றும் உள்ளங்கால்களில் பொதுவாகக் காணப்படும். சருமத்தின் வெளிப்புற அடுக்கின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகின்றன.
உடலில் கை மற்றும் கால்களில் மருக்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுவது பொதுவானது. இந்த மரு மற்றும் கட்டிகளால் பாதிப்புகள் இல்லை என்று சொன்னாலும், சில சமயங்களில் வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மருக்கள் பொதுவாக கைகள், விரல்கள், கால்கள் மற்றும் உள்ளங்கால்களில் பொதுவாகக் காணப்படும். சருமத்தின் வெளிப்புற அடுக்கின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகின்றன.
Advertisment
கழுத்து, அக்குள், இடுப்பு மற்றும் கண் இமைகள் போன்ற இடங்களில் பொதுவாகக் காணப்படும். கைகளிலும் கால்களிலும் தோன்றலாம். குறிப்பாக, வெளியில் தெரியாத இடங்களில், மருக்கள் மற்றும் கட்டிகள் இருந்தால் அவை நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு தரும் வகையில், டாக்டர் தீபா டிப்ஸ் கொடுத்துள்ளார். சிலருக்கு வைரல் இன்ஸ்பெக்ஷனா மரு மாதிரி வீக்கமாக இருக்கும்.
இந்த மாதிரி மரு வந்திருக்கிறது என்றால், பூண்டை பேஸ்ட் மாதிரி அரைத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து கிராம்பை பேஸ்டாக அரைத்து ஒரு ஸ்டிக்கில் பூண்டு பேஸ்ட் மற்றும் கிராம்பு பேஸ்டை எடுத்து மரு மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் வைக்கலாம். இப்படி செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்தன்மையை இழந்து கொட்டிவிடும்.
Advertisment
Advertisements
அதுவே கட்டி மாதிரி வருகிறது என்றால், தொற்று இருக்கிறது என்று அர்த்தம். இதனை தடுக்க, மஞ்சலும் வேப்பிலையும் அரைத்து கற்றாழை ஜெல்லுடன் அதனை குழைத்து கட்டி இருக்கும் இடத்தில் தடவி வரவேண்டும். இப்படி செய்யும்போது கட்டி அப்படியே குணமாகிவிடும் என்று கூறியுள்ளார்.