கால்களில் உள்ள இரத்த நாளங்கள் வீங்கி, புடைத்து, முடிச்சு முடிச்சாகத் தோன்றுவதைக் வெரிக்கோஸ் நோய் என்று சொல்வார்கள். இது பொதுவாக கால்களில் ஏற்படுகிறது, ஆனால் உடலின் மற்ற பாகங்களிலும் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. கால்களில் நீல அல்லது ஊதா நிறத்தில் தெரியும் வீங்கிய, முறுக்கப்பட்ட நரம்புகள், கால்களில் வலி அல்லது பாரமான உணர்வு, கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம், கால்களில் அரிப்பு, கால்களில் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல அறிகுறிகள் உள்ளன.
Advertisment
இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் இரத்தம் இதயத்திற்குத் திரும்புவதை உறுதி செய்கின்றன. இந்த வால்வுகள் சரியாக வேலை செய்யாவிட்டால், இரத்தம் கால்களில் தேங்கி, நரம்புகள் வீங்கிவிடும். வயதாகும்போது நரம்புகளில் உள்ள வால்வுகள் பலவீனமடைகின்றன. நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்ந்திருப்பதன் காரணமாகவும் இந்த வெரிக்கோஸ் நோய் ஏற்படலாம். அதிக எடை நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நரம்புச் சுவர்களை தளர்த்துவதால் ஏற்படலாம்.
இந்த நோய் பாதிப்புக்கு தீர்வு குறித்து டாக்டர் கௌதம் கூறியுள்ளார். மருத்துவ ரீதியாக இந்த வெரிக்கோஸ் நோய் 5 வகைளாக பிரிக்கப்படுகிறது. தொடை மற்றும் கால் பகுதிகளில் பச்சை நிறமான கோடுகள் தெரிவது முதல் நிலை. பச்சை நிறமாக கோடுகள் அனைத்தும் கரும் பச்சை நிறமாக மாறுவது 2-ம் நிலை. தொடை மற்றும் கால்களில் ரத்த குழாய்கள் வெளியில் தொங்கிக்கொண்டிருப்பது 3-வது நிலை. கால்முழுவதும் ரத்தக்குழாய் தொங்கிக்கொண்டு இருப்பது 4-வது நிலை.
Advertisment
Advertisements
கால்களில் ரத்தக்குழாய் இருக்கும் அனைத்து இடங்களும் வெடித்து அந்த இடங்களே புண்களாக மாறிவிடுவது 5-வது நிலை. உடற்பயிற்சியின் மூலம் இந்த வெரிக்கோஸ் பிரச்னையை சரி செய்யலாம். முக்கியமாக 50 கிராம் எள்ளு எடுத்து, கொதிக்கும் பாலில் அதனை சேர்த்து, நன்றாக அரைத்து ஒரு பேஸ்ட் மாதிரி செய்து, இந்த பேஸ்டை தொடையில் இருந்து கணுக்கால் வரை பத்து மாதிரி போட்டு வரலாம். ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் காலை கழுவிவிடலாம். வாரத்திற்கு 2-3 நாட்கள் இப்படி செய்தால், ரத்தக்குழாய் அமைப்பு சீராகி பாதிப்பு குணமாகும் என்று கூறியுள்ளார்.