Advertisment

சளி, இருமலை குணமாக்கும் தூதுவளை ரசம்; அருமையான சுவையின் ரகசியம் என்ன தெரியுமா?

Taml Health Update : மருத்துவ குணங்கள் நிறைந்த தூதுவளை மனித உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சளி, இருமலை குணமாக்கும் தூதுவளை ரசம்; அருமையான சுவையின் ரகசியம் என்ன தெரியுமா?

Tamil Recipe Thuthuvalai Rasam : பாரம்பரிய மருத்துவ குணம் உள்ள தாவரங்களில் தூதுவளை கீரைக்கு முக்கிய இடம் உண்டு சளி இருமல் உட்பட பல நோய்களுக்கு தீர்வளிக்கும் இந்த கீரை இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்காற்றுகிறது.  இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்பகளுக்கு நன்மை அளிக்கும். பற்களை பலப்படுத்தும் இந்த மூலிகை வாதம் மற்றும் பித்த நோய்களுக்கு உடனடி தீர்வை தருகிறது. மேலும் பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை தூதுவளைக்கு உண்டு.

Advertisment

தூதுவளை இல்லையை பச்சையாக மென்று தின்றாலே அதன் மருத்துவ குணங்களை நேரடியாக பெற முடிவும். மேலும் இந்த துதுவளை இலையை காயவைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளலாம். நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து உட்கொள்ளலாம். அந்த வகையில் தூதுவளையில் ரசம் வைப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ரசம் அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

தூதுவளை கீரை – ஒரு கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பூண்டு – 6 பல்

கடுகு – சிறிதளவு

தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

புளி – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 6

மிளகு, சீராகம் – தலா 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை :

முதலில் தூதுவளை கீரையை நன்றாக கட் செய்து நெய்யில் வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் வேறொரு கடாய் வைத்து அதில் 2 டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.

அதன்பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் புளியை ஒரு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சூடானவுடன் இந்த கலவையை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து பொடி செய்த மிளகு சீராக தூளை சேர்க்கவும். அடுத்து சிறிதளவு கறிவேப்பிளை சேர்க்கவும். அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை இடித்து சேர்க்கவும். அடுத்து வரமிளகாய்யை கிள்ளி அதில் சேர்க்கவும்.

அதன்பிறகு நெய்யில் வதக்கிய தூதுவளை இலையை இடித்து அல்லது மிக்சியில் அரைத்து இதில் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூளை சேர்க்கவும். அதன்பிறகு இதை நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.

அடுத்து தனியாக ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு அதில் ககுடு, தோலுடன் இடித்த பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்துள் சேர்த்து நன்றாக தாளித்து  கொதித்த ரசத்தில் சேர்க்கவும். அதன்பிறகு இதனை சிறிது நேரம் மூடி வைத்து எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான தூதுவளை ரசம் தயார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Health Tips Tamil Recipe Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment