Tamil Serial News, Serial Actress Nithya Ravindran
Tamil Serial News: சீரியல்களில் முன்னணி நடிகைகளுக்கு சமமாக அம்மா நடிகைகளும் அப்ளாஸை அள்ளுவார்கள். அந்த வகையில் நித்யா ரவீந்திரனை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
1969-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான குருதிகாலம் படம் தான் நித்யாவுக்கு முதல் படம். அதன் பிறகு நிறைய தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதைத் தொடர்ந்து, ஹீரோயினாகவும், அதன் பிறகு சிறந்த அம்மா கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதோடு பல சீரியல்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இளம் வயதில் நித்யா
Advertisment
Advertisements
நடுத்தர வர்க்க தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நித்யா ரவீந்திரன், சென்னையில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றவர். நித்யாவின் தந்தை ‘மெட்ராஸ் அணு மின் நிலையத்தில்’ அரசு ஊழியராகவும், தாய் இல்லத்தரசியாகவும் இருந்தார்கள். அவரது தந்தைக்கு ஒரு நாடக குழு இருந்தது. அந்த குழு அரங்கேற்றும் நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் நித்யா. இவருக்கு ஜெயஸ்ரீ, லட்சுமி என்ற இரண்டு தங்கைகளும், அக்கா கல்யாணியும் உள்ளனர். சென்னையின் ஸ்டெல்லா மாத்துடினா கல்வியியல் கல்லூரியில், எட்டாம் வகுப்பு வரை தனது முதன்மை கல்வியைப் பெற்றார் நித்யா.
ஆனால் வருகை பற்றாக்குறை காரணமாக 9-ம் வகுப்புக்கு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். அதற்குள் திரைப்படங்களில் பிஸியாகிவிட்டதால், ஒன்பதாம் வகுப்போடு படிப்பை கைவிடும் நிலை ஏற்பட்டது. படிக்க முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்றளவும் நித்யாவுக்கு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, தமிழ் திரைப்படங்களில் கேமராமேனாக பணியாற்றிய ரவீந்திரனை மணந்தார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.
அலைபாயுதே, பம்மல் கே சம்பந்தம், உத்தமபுத்திரன் போன்ற பல தமிழ் படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார் நித்யா. ’நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்’, ‘உதிரி பூக்கள்’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’, ’மின்னலே’, ‘மகராசி’ உள்ளிட்ட பல பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார் நித்யா. தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ தொடரில் ஹீரோ யுவாவிற்கு அம்மாவாக நடித்து வருகிறார் நித்யா. இவருக்கு ஜோடியாக லிவிங்ஸ்டன் நடித்து வருகிறார்.
நித்யா ரவீந்திரன்
தவிர டப்பிங்கிலும் நித்யா கில்லாடி. 1988-ம் ஆண்டு ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்தில் நடிகை ரூபிணிக்கு பின்னணி குரல் கொடுக்கத் தொடங்கிய அவர், ரேகா, கஸ்தூரி, சீமா, நளினி, ரோஜா, அம்பிகா, ஜெயசுதா உள்ளிட்டவர்களுக்கு பல படங்களில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
நித்யாவுக்கு பிடித்த பொழுதுபோக்கு சமையல். சீரியல்களில் அவரது பாத்திரங்களையும் தமிழ் தொலைக்காட்சித் துறையில் அவர் செய்த பங்களிப்பையும் யாராலும் மறக்க முடியாது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”