tirupati room booking : இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் அறியப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக்கும் வெங்கடேசன். பெருமாள், திருமால் என்று பக்தகோடிகளால் வணங்கப்படும் திருப்பதி கோவில் ஆந்திராவில் அமைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பிரசத்தி பெற்ற ஏழுமலையான கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
அடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா? இந்த தகவலை படிச்சிட்டு போங்க!
அதிலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காத்திருப்பு அறை முழுவதும் நிரம்பி (ட்ராவல்ஸ் பங்களா காட்டேஜ்) டிபிசி கேட் வரை அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 24 மணிநேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் விரைவில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் சேவை அறிமுகம்
tirupati room booking and timing!
திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கென ஓய்வறைகள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஜூலை 1ம் தேதி முதல் இந்த ஓய்வறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குடும்பத்துடன் திருப்பதி செல்கிறீர்களா? இந்த முக்கிய தகவலை தெரிஞ்சிட்டு போங்க அப்புறம் ஃபீல் பண்ணாதீங்க!
அதன்படி ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை அனைத்தும் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக பக்தர்களுக்கு ஒதுக்கப்படும் அறைகளில் 24 மணி நேரத்திற்கு பக்தர்கள் காலி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வறையில் உள்ள அனைத்து அறைகளும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யக்கூடிய வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்!