Advertisment

விஜய் டிவி ’நாம் இருவர் நமக்கு இருவர்’ வித்யாவா இது?

Naam Iruvar Namakku Iruvar: பத்தாவது படிக்கும் போது அப்பாவை இழந்த அஷ்ரிதா, அவர் மூலமாக, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைந்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Naam Iruvar Namakku Iruvar Vidhya, Ashritha Sreedas

Naam Iruvar Namakku Iruvar Vidhya, Ashritha Sreedas

Ashritha Sreedas : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில், வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் அஷ்ரிதா ஸ்ரீதாஸ். 3 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், மாடலிங்,  சீரியல் என பிஸியாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறார்.

Advertisment

ஃபேஷன் குயின் அப்போ நதியா, இப்போ சமந்தா : படத் தொகுப்பு

அர்ஷிதாவின் பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். அவரின் அப்பா புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தவர். பத்தாவது படிக்கும் போது அப்பாவை இழந்த அஷ்ரிதா, அவர் மூலமாக, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைந்திருக்கிறார். `அப்பா அம்மா’ என்கிற அந்த சீரியல்தான் முதல் அறிமுகம். சீரியல் வாய்ப்பு தொடர்ந்து அமையாத காரணத்தினால், அந்த நேரங்களில் மாடலிங் பக்கம் கவத்தைத் திருப்பினார் அஷ்ரிதா. இப்போது, மாடலிங், சீரியல், சினிமான்னு பிஸியாக இருக்கிறார்.

’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் வாய்ப்பைப் பற்றி குறிப்பிட்ட அர்ஷிதா,  ”அந்த சீரியலின் இயக்குநர், சின்ன வயசிலிருந்தே என்னைப் பார்த்துட்டிருக்கார். என் திறமை அவருக்கு நல்லாத் தெரியும். நான் குழந்தை நட்சத்திரமா இருந்தப்போ, என்னைத் தூக்கிட்டு `பாப்பா’ நட்சத்திரமா பாசம் பொழிந்த டைரக்டர்ஸ் பலரும் இப்பவும் என்னைக் குழந்தையா நடத்தறாங்க. என் அப்பா இப்போ இல்லைன்னாலும், அவர் எனக்கு வழிகாட்டிக் கொடுத்த மீடியா பயணத்தை என் இறுதி மூச்சு வரை தொடரணும். அதுதான் என் ஆசை. அப்பா இறந்ததுக்கு அப்புறம் கேமரா தான் என் அப்பா.

எப்பவும் சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி, அப்பாவை நினைச்சுப்பேன். முதல் சீரியலில் `நாகேஷ்’ தாத்தாவோடு நடிச்சேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என அந்தக் குழந்தை வயசில் தெரியாது. அவரோடு ஜாலியா விளையாடுவேன். ஷீட்டிங் ஸ்பாட்ல என்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பார். அவர் நடிகர் மட்டுமல்ல, மிகப்பெரிய ஜீனியஸ். அத்தனை அழகா கணக்குப் போடுவார். சின்ன சின்ன விஷயங்களை தெளிவா புரிய வைப்பார். அவருடன் நடிச்சது என் பாக்கியம்” என மகிழ்கிறார் அஷ்ரிதா.

அவரின் அம்மாவும் சீரியலில் நடித்தவர். “அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவங்க நடிக்க விரும்பலை. என் அண்ணனும் அம்மாவும் தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். என் காஸ்டியூம்ஸ், மேக்கப் விஷயங்களை அம்மா பார்த்துப்பாங்க. ஜீ தமிழ் டிவியில் நடிக்கும்போது, தீபக் அண்ணாவும், ஶ்ரீ அண்ணாவும் எனக்கு ரொம்ப குளோஸ். `இப்படி நடி, அப்படி நடி’னு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க.

தலைமுடி வெட்ட 200 ரூபாயாம்: சென்னை ‘லாக் டவுன்’ பரிதாபம்

சீனியர் ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு பார்க்க மாட்டேன். என் வளர்ச்சியை விரும்பி, ஒரு செயலை மாற்றிக்க யார் சொன்னாலும் கேட்டுப்பேன். என் ஷாட் முடிஞ்சதும், ரூமுக்குள்ளே உட்கார்ந்துட மாட்டேன். மத்தவங்க எப்படி நடிக்கிறாங்க, அவங்கக் கிட்ட எதை கத்துக்கலாம்னு கவனிப்பேன். இது, அப்பா எனக்குச் சொல்லிக்கொடுத்த பால பாடம். டப்பிங்கிலும் எனக்கு ஆர்வம் இருக்கு. சீக்கிரமே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் என்னைப் பார்க்கலாம். என் அப்பாவுக்கு நான் ஹீரோயின் ஆகணும்னு ஆசை. அவர் ஆசையை நிறைவேற்றுவேன்” என்கிறார் அஷ்ரிதா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment