vijay tv pandianstores mullai : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.
Advertisment
இன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.தனது விடாமுயற்சி விஸ்ரூவ வெற்றியை கண்டு செம்ம ஹாப்பில் இருக்கிறார் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை கூடிய விரைவில் எடுத்து வைக்கிறார் சித்ரா. இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி,அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.
நடிகை சித்ராவுக்கு இளைஞர்கள் மத்தியில் தனி ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. பொதுவாகவே பெண் நடிகைகளுக்கு ஆண் ரசிகர்கள் மத்தியில் தான் அதிக வரவேற்பு ரசிகர்கள் ஆனால், நடிகை சித்ராவுக்கு ஒரு மிகப்பெரிய தீவிர பெண் ரசிகை ஒருவர் இருக்கிறார். இந்த ரசிகையின் முகம் யாருக்கும் தெரியாது. வெறும் கண்களை காட்டி மட்டுமே இவரை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார். விஜய் டிவியில் நடைப்பெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் இந்த ரசிகையை முல்லை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் அந்த ரசிகையின் பிறந்தநாளன்று முல்லை மிகப்பெரிய சர்ப்பிரைஸ் செய்துள்ளார். அவருக்கு கேக் வெட்டி விதவிதமான சர்ப்பிரைஸ் கொடுத்து மகிழ்வித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உண்மையில் ரசிகையை ரசிக்கும் தலைவி தான் முல்லை.