கால் ஆணி தடம் தெரியாமல் மறையும்... மோருடன் இந்தப் பொடி சேர்த்து; இப்படி தடவி கட்டுங்க: டாக்டர் மோகன் ஆனந்த்
கால் ஆணியை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்தலாம் என்று மருத்துவர் மோகன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கால் ஆணியை எவ்வாறு வீட்டு வைத்திய முறையில் குணப்படுத்தலாம் என்று மருத்துவர் மோகன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கால் ஆணி என்பது இன்றைய சூழலில் பலரையும் தொல்லைப்படுத்தும் ஒரு பிரச்சனை என்று மருத்துவர் மோகன் ஆனந்த் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இவை ஏற்படுவதற்கான காரணங்களை அவர் கூறியுள்ளார்.
2/5
அந்த வகையில், உடல் பருமன், சரியான அளவில் இல்லாத அல்லது இறுக்கமான காலணிகள் அணிவது, சுத்தமின்மை போன்ற பல்வேறு காரணங்களின் வாயிலாக கால் ஆணி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் மோகன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
3/5
ஆனால், கால் ஆணி குறித்து பெரிதும் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில், வீட்டு வைத்திய முறையில் இதனை குணப்படுத்த முடியும்
Advertisment
4/5
அந்த வகையில், சித்திரமூலம் பவுடரை மோர், பன்னீர் அல்லது தண்ணீரில் கலந்து பசை பதத்திற்கு மாற்றி, கால் ஆணி இருக்கும் இடத்தில் கட்டலாம்.. இது அமிலத்தன்மை கொண்டது என்பதால், பயன்படுத்தும் முன் விளக்கெண்ணெய் அல்லது மஞ்சள் தடவலாம். இது இரண்டு நாட்களில் கால் ஆணியை மறைக்க உதவும். மீண்டும் கால் ஆணி வராமல் தடுக்க, இதை ஆறு மாதங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் மோகன் ஆனந்த் கூறுகிறார்.
5/5
இது தவிர சீரான உடல் எடையை பராமரித்து, சரியான அளவிலான காலணியை பயன்படுத்தி, கால்களை சுத்தமாக வைத்திருந்தாலும் கால் ஆணி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அறிவுறுத்தப்படுகிறது.