/tamil-ie/media/media_files/uploads/2018/09/d337.jpg)
இந்தியா vs ஆப்கானிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடக்கவிருந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய போட்டியை காண கேஷுவலாக டிவியை ஆன் செய்தால், தோனி கையில் டாஸ் வைத்துக் கொண்டு நிற்க, என்னாது இது.. ரோஹித் மூஞ்சு தோனி மாதிரி தெரியுதுன்னு பார்த்தா, அது தல தோனியே தான்.
ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியாச்சு... இன்றைய எதிரணி ஆப்கானிஸ்தான். ஸோ, நிச்சயம் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படி கேப்டன் ரோஹித்தை மாற்றி தோனியை கேப்டனாக்குவார்கள் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
696 நாட்கள் கழித்து, தோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். அதுமட்டுமின்றி, இது கேப்டனாக தோனியின் 200வது மேட்சும் கூட.. தோனி ரசிகர்களுக்கு உண்மையில் இது செம என்ஜாய்மென்ட் தான்.
அப்புறம் இந்தியன் டீமை சற்று உற்றுப் பார்த்த போது நமக்கு மேலும் ஒரு வியப்பிற்குரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! இந்திய அணியில் ஐந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தோனி, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா என்று ஐந்து சிஎஸ்கே வீரர்கள் இந்திய அணியை ஆக்கிரமித்துள்ளனர்.
சிஎஸ்கே கெத்து தானே!.
மேலும் பார்க்க: இந்தியா vs ஆப்கானிஸ்தான் லைவ் கிரிக்கெட் மேட்ச்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.