/tamil-ie/media/media_files/uploads/2022/10/Kovai-Formula-car-race.jpg)
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான பார்முலா கார் பந்தயத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்ட வீர்ர்கள் வெற்றி பெறும் முனைப்பில் மைதானத்தில் சீறிப்பாய்ந்தனர்.
செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வே டிராக் மைதானத்தில் ஜே.கே. டயர்ஸ் சார்பாக 25 ஆவது தேசிய அளவிலான கார் மற்றும் பைக் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா.. தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்
இரண்டாவது நாளாக நடைபெற்ற போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜம்மு, பட்டியாலா என பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி.கப், எல்.ஜி.பி. பார்முலா 4, ஜே.கே.டயர் எண்டுரன்ஸ் கப், நோவிஸ் கப் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் பார்முலா கார் மற்றும் இரு சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம் தனித்தனியே நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட வீர்ர்கள் வெற்றி பெறும் முனைப்பில் மைதானத்தில் சீறிப்பாய்ந்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீர்ர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது சுற்று போட்டிகள் டிசம்பர் மாதம் இதே மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.