Ranji Trophy Shams Mulani, Aditya Tare rescue Mumbai - மும்பையை சுருட்ட கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட தமிழகம்
தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி குரூப் 'பி' போட்டிகளின் தொடக்க நாளில், மும்பை ஆறு விக்கெட்டுகளுக்கு 284 ரன்கள் எடுத்த நிலையில், ஷாம்ஸ் முலானி (87) மற்றும் ஆதித்யா தாரே (69, பேட்டிங்) 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Advertisment
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியில் ஓப்பனர் ஜெய் கோகுல் 41 ரன்களும், புபேல் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிறகு ஹர்திக் டமோர் 21 ரன்னிலும், சித்தார்த் லட் 0 ரன்னிலும், சர்ஃபராஸ் கான் 36 ரன்களிலும் அவுட்டானார்கள். இதனால், 129 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற இக்கட்டான சூழலில் மும்பை தடுமாறியது.
பிறகு 6வது விக்கெட்டுக்கு ஷாம்ஸ் முலானி கேப்டன் ஆதித்ய தாரே ஜோடி சேர்ந்தனர். பார்ட்னர்ஷிப் 155 ரன்கள் எடுத்திருந்த போது, முலானி 87 ரன்களில் அவுட்டானார்.
Advertisment
Advertisements
தமிழக அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஷ்வின், சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆடுகளம் மெதுவாக இருப்பதாக முலானி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“நான் கொஞ்சம் பொறுமையாக இருந்தேன். எனது பலத்திற்கு ஏற்றவாறு விளையாட முயற்சித்தேன்," என்று அவர் இன்று தனது அணுகுமுறையைப் பற்றி கூறினார்.
இதற்கிடையில், ராஜ்கோட்டில், இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா தனது 50 வது ஃபர்ஸ்ட் கிளாஸ் சதத்தை அடித்தார், கர்நாடகாவுக்கு எதிரான இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய 9 பேர் கொண்ட பட்டியலில் புஜாரா இணைந்தார்.
சுருக்கமான ஸ்கோர்:
89.4 ஓவர்களில் மும்பை 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் (ஷம்ஸ் முலானி 87, ஆதித்யா தாரே 69 பேட்டிங், ஜே பிஸ்டா 41; ஆர் அஸ்வின் 3/58, ஆர் சாய் கிஷோர் 3/77) தமிழ்நாடு.