திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 9 மாணவர்கள் தங்கள் ஜூனியர்களை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அந்த மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேறொரு மாணவர் எடுத்ததாகக் கூறப்படும் வீடியோவில், சட்டை மற்றும் லுங்கி அணிந்த முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் கயிற்றால் அடிப்பதைக் காணலாம். இந்த சம்பவம் ஆதி திராவிடர் அரசு ஆண்கள் நல விடுதியில் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: சென்னை கே.கே. நகரில் பயங்கரம்; வி.சி.க. நிர்வாகி வெட்டிக் கொலை
கல்லூரி முதல்வர் என்.கலைவாணி ஏப்ரல் 25 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்தனர் மற்றும் ராகிங் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. இதன் அடிப்படையில், ராகிங் தடுப்பு பிரிவு மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நடத்திய விசாரணையில், சம்பவம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைத்தன.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தன்னிடம் பேசி, அவரது ஆலோசனை மற்றும் ராகிங் தடுப்புப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில், ஒன்பது மாணவர்களை ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கலைவாணி கூறினார். இந்த மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும், விடுதி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட மாணவர்களில், எட்டு பேர் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஒருவர் இரண்டாம் ஆண்டு மாணவர்.
விடுதி ஆதாரங்களின்படி, ராகிங் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஜூனியர் மாணவர்கள் மற்ற ராகிங் சீண்டல்களுடன் சீனியர்களின் தட்டுகளை சுத்தம் செய்ய சீனியர்களால் கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil