Advertisment

தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்ட முயற்சி; பா. ரஞ்சித் மீது போலீசில் புகார்

இயக்குனர் பா. ரஞ்சித் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி போலீசில் பால முரளி என்பவர் அளித்த புகாரில், தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டுகிறார் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
“மெர்சல் பட காட்சிகளை நீக்கத் தேவையில்லை” - இயக்குநர் பா.இரஞ்சித்

பரமக்குடி போலீசில் இயக்குனர் பா. ரஞ்சித் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளம் பகுதியை சேர்ந்த தீபக் ராஜா (30) என்பவரை கடந்த 20ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இந்தக் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை கூறி பா. ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார்.

Advertisment

இதையும் படிங்க : ஆளுநருக்கு குல்லா, அவரது மனைவிக்கு பர்தா அணிவித்தால் ஏற்பாரா? - சபாநாயகர் அப்பாவு கேள்வி

இந்த நிலையில், தென் மாவடடங்களில் சாதிய மோதலை தூண்ட பா. ரஞ்சித் முயல்கிறார் என பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை பால முரளி என்பவர் அளித்துள்ளார். புகாரில், “தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விட பா.ரஞ்சித் முயற்சிக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தீபக் ராஜாவை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. தீபக் ராஜா மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், நெல்லை - திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில சாப்பிட வந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தென்மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பா. ரஞ்சித்தின் ட்வீட் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment