தமிழகத்தில் இருந்து டெல்லி தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும், 450 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை இன்று நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரையில், 1103 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 658 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இஸ்லாமியர்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று ஒரே இரவில் வந்து தங்களை பதிவு செய்துக்கொண்டனர், அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ் கூறியதாவது:
“அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க டெல்லி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் தாமாக முன் வந்து தகவலை தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தேன் , டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் 523 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் மீதமுள்ளவர்கள் தாமாக முன் வந்து தகவல் தெரிவித்தால் உங்களுக்கு உரிய சிகிச்சை அளிப்போம்.
நீங்கள் சொல்லும் தகவல் உங்கள் குடும்பத்தைக் காக்கும், சமுதாயத்தைக் காக்கும் என தெரிவித்திருந்தேன் அதை ஏற்று அனைவரும் தாமாக முன் வந்து தகவலை தெரிவித்துள்ளனர் அதற்கு முழுமையான நன்றி . தற்போது 1103 பேர் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 658 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் நாளை சோதனை நடத்தப்படும்.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று பரவல் விகிதம் - இவ்வளவு வித்தியாசமா?.
இதுவரை 77330 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு குவாரண்டைனில் உள்ளவர்கள் 81 பேர். இதுவரை 4070 பேருக்கு இதுவரை தமிழகத்தில் செயல்படும் டெஸ்டிங் லாப் 17, இதுவரை 2726 சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பாசிட்டிவ் 234 , இன்று மட்டும் 110 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 110 பேரும் டெல்லி சென்று திரும்பிய 1103 பேரில் அடங்குவர். இதில் 658 பேருக்கு சாம்பிள் எடுத்துள்ளோம். மீதமுள்ளவர்களுக்கும் சாம்பிள் எடுப்போம்.
110 பேரில் யார் யார் கலந்துக்கொண்டார்கள் அவர்களை சுற்றி உள்ளவர்களின் 7 டூ 8 கி.மீ. பஃபர் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த தடுப்பு நடவடிக்கை மூலம் மட்டுமே நாம் கடுமையாக தடுக்க முடியுமோ தனியார் மருத்துவமனையுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளோம். கர்ப்பிணி பெண்கள் 1 லட்சம் பேருக்கு லிச்ட் எடுத்துள்ளோம், தனியார் மருத்துவமனைகளையும் அதே லிஸ்ட் எடுக்க கூறியுள்ளோம். வயதானவர்கள் மிக மிக எச்சரிக்கையாக தனியாக இருக்க வேண்டும். வெளியில் சென்று வருபவர்கள் அவர்களிடம் சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் பண்ணனும்.
1500 மேல் என்று சொன்னோம் அதில் 250 , 300 பேர் அங்கே யே இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வந்துவிட்டார்கள். நேற்று நாங்கள் கோரிக்கை வைத்தவுடன் இரவு முழுதும் அனைவரும் வந்துவிட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுத்துள்ளோம். மொத்த எண்ணிக்கை 1103 பேர் தாமாகவே வந்துள்ளனர். மொத்தம் 190 பேர் டெஸ்ட் பாசிட்டிவ், மாநாட்டில் பங்கேற்று யாராவது வராமல் இருந்தால் தயவு செய்து அவர்களும் வாருங்கள். அவர்கள் குடும்பத்தை, இந்த சமூகத்தை பாதுகாக்க உதவும் என்று வேண்டுகோள் வைத்தது பலனளித்தது.
அவரவர்கள் வீட்டிலேயே இருந்தவர்கள். அவர்கள் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை செய்ய உள்ளோம். அவர்கள் வசிக்கும் பகுதியில் சுற்று வட்டாரம் , முழுதும் கிருமி நீக்கும் வேலை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அனைத்து துறைகளையும் இணைத்து நடத்த உள்ளோம்.
ரேஷன் கடைகளில் நாளை முதல் ரூ.1000 நிவாரணம் - விதிவிலக்கான நபர்களுக்கு நேரில் பணம்
நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். மாவட்ட வாரியாக நெல்லை 6 பேர், கோவை 28 பேர், ஈரோடு 2 பேர், தேனி 20 பேர், திண்டுக்கல் 17, மதுரை 9 பேர், சிவகங்கை 5, பேர் திருப்பத்தூர் 7பேர், செங்கல்பட்டு 7 பேர், திருவாரூர் 2 பேர், தூத்துக்குடி 2 பேர், காஞ்சிபுரம் 2 பேர், கரூர் 1, சென்னை 1, திருவண்ணாமலை 1 மாநாட்டில் வந்தவர்கள் மொத்தம் 110 பேர் 15 மாவட்டத்திலிருந்து சென்றுள்ளனர். நேற்றைய கணக்கு 80 பேர் 18 மாவட்டங்கள். மொத்தம் மாநாட்டிலிருந்து வந்தவர்கள் 19 மாவட்டங்களில் உள்ளனர்.
1103 பேரில் 658 பேருக்கு டெஸ்ட் எடுத்துவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு இன்று எடுக்கப்படும். ஒரு நாளைக்கு 5000 பேருக்கு டெஸ்ட் எடுக்கலாம். இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்க்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.