/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-17-1.jpg)
'வெற்றிவேல் யாத்திரை'
வருகிற சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்கும் இந்த 'வெற்றிவேல் யாத்திரை' டிசம்பர் 6ல் திருச்செந்துாரில் நிறைவடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரையின் அடையாள சின்னம் மற்றும் பாடலும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தாமரை மலர்ந்திட "வெற்றிவேல் யாத்திரை" முத்திரையை (LOGO) மாநிலத் தலைவர் அவர்கள் இன்று கமலாலயத்தில் வெளியிட்டார்.
யாத்திரைக்கான "வேல் வேல் ... வாராரு வாராரு முருகவேல் கொண்டு" என்ற பாடலும், யாத்திரைக்கான முத்திரையும் (LOGO) வெளியிடப்பட்டது.
இந்த யாத்திரைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாடலில், " அந்த பொன்மனச்செம்மலின் அம்சமாய் நாங்கள் மோடியைக் கண்டோமடா என்ற வார்த்தைகளின் போது எம்ஜிஆர் அப்படியே மோடியாக மாறுகிறார்.
மேலும், தமிழக பாஜகவில் ஒரு வலுவான தலைவர் உருவாகியுள்ளார் என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் பாடல் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்சியின் மற்ற தலைவர்கள் யாரும் கானொளியில் தென்படவில்லை.
மேலும், இந்த யாத்திரைக்கான லோகோவில் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு நடுவில் வேல் நிற்பது போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
அதிவானியின் ரதயாத்திரை, தேசிய அரசியலில் பெறும் தாக்கங்களை எற்படுத்தியது. இந்த யாத்திரை மூலம், இந்து சமய மக்களின் வாக்குகளை ஒன்றினைத்தது. அதே, போன்றே ஒரு யுக்தியை தான், தமிழக பாஜக வெற்றிவேல் யாத்திரை மூலம் செயல்படுத்த இருக்கிறது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களை சந்தித்து மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ஆதரித்தற்கு நன்றியும், அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவித்தார் எல்.முருகன்
’ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை’ திவ்யா சத்யராஜ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.