/tamil-ie/media/media_files/uploads/2023/08/Lenin.jpeg)
ஈ டிவி பாரத் ஊடக மூத்த செய்தியாளர் ஆர்.லெனின்
ஈ டிவி பாரத் ஊடக மூத்த செய்தியாளர் ஆர்.லெனின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஈ டிவி ஊடக நிறுவனத்தில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வந்த ஆர்.லெனின் (வயது 38) இன்று 07-08-2023 திங்கட்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. அவர் இன்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: காவிரி ஆணையம் தொடர்பான துரைமுருகன் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது – பி.ஆர் பாண்டியன்
செய்தியாளர் ஆர்.லெனின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
38 வயதான ஆர்.லெனின், இந்தியன் எக்ஸ்பிரஸ், டிடி நெக்ஸ்ட், டெக்கான் கிரானிக்கல் ஆகிய நாளிதழ்களில் சிறப்பாக பணியாற்றிய செய்தியாளர். சுற்றுச்சூழல் குறித்த செய்திகளை மிகுந்த சமூக அக்கறையுடன் பதிவு செய்துக் கொண்டிருந்த நல்ல ஊடகவியலாளர் இன்று நம்மிடையே இல்லை. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ஊடக உறவுகள் என அனைவருடனும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
சமீப காலமாக இளம் வயது ஊடகவியலாளர்கள் மறைவு செய்திகள் பேரதிர்ச்சியைத் தருகிறது. இந்த சூழலில் பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலன் குறித்து அக்கறைக் கொண்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதும் மன அழுத்தமின்றி வாழும் பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் நியூஸ் 7 செய்தியாளர் ரஞ்சித் குமார் 35 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்போது மீண்டும் ஒரு இளம் வயது பத்திரிக்கையாளர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.