கேரளத்தில் இயல்புக்கு மாறாக 5 நாட்கள் மழை தாமதமாகும் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை தாமதமாகியுள்ளது. 8ம் தேதியில் இருந்தே பருவமழை துவங்கும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்தது.
கேரளாவிற்கு ஆரஞ்ச் நிற அலர்ட்
ஜூன் 9ம் தேதி கொல்லம், ஆழப்புலாவிலும், 10ம் தேதி திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai weather
சென்னை வானிலை : சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்புகள் இல்லை... மழை பெய்து கிட்டத்தட்ட 180 நாட்களுக்கும் மேலாகிவிட்டன. தண்ணீர் இன்றி பல்வேறு இடங்களில் மக்கள் மிகவும் வேதனைப்பட்டு வருகின்றனர். அதிகபட்ச வெப்பமாக 38 டிகிரி செல்சியல் வெப்பநிலையும், குறைந்த பட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் .
எச்சரிக்கை
திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க : சென்னையை மட்டும் ஏமாற்றும் மழை! பின்னால் இருக்கும் பகீர் காரணத்தை போட்டுடைத்த சென்னை வெதர்மேன்.
இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த அறிக்கையின் படி, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை நாளை கேரளாவில் பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் பகுதிகள்
நேற்று தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நீலகிரி, மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இன்று சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றின் வேகம் : காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
தொடர் கனமழை காரணமாக பவானி அணையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது. தண்ணீர் பற்றாக்குறையால் இனி அவதிப்பட வேண்டியதில்லை என மகிழ்ச்சியில் மக்கள்.
கேரளாவில் ரெட் அலர்ட்
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, திரிசூர் மாவட்டத்திற்கு ஜூன் 10ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. எர்ணாகுளம், மலப்புரம், கோழிகோடு ஆகிய மாவட்டங்களில் ஜூன் 11ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.