Chittoor TNSTC bus car accident : சென்னை நங்கல்லூரை சேர்ந்தவர் முனி கிருஷ்ணா. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு தங்களுடைய காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரிக்கு அருகே கன்னமெட்டு என்ற பகுதி உள்ளது. அந்த இடத்தில் தமிழக அரசு பேருந்து ஒன்று திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்து எதிரில் வந்து கொண்டிருந்த முனி கிருஷ்ணாவின் காரின் மீது பலத்த வேகத்தில் மோதியது. இதில் முனி கிருஷ்ணா, குமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படிக்க : நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் உள்பட 3 பேர் கொலை…
பலத்த காயம் அடைந்த பயணிகள் சிலரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நகரி போலீஸார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chittoor tnstc bus car accident 4 people died at the spot