/tamil-ie/media/media_files/uploads/2017/10/dr.jpg)
-
Jun 02, 2025 21:45 IST
ஈரோட்டில் வேளான் கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஜூன் 11-ஆம் தேதியன்று வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தக் கண்காட்சி ஜூன் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
-
Jun 02, 2025 20:48 IST
குடியாத்தம் அருகே தீ விபத்து - 5 வீடுகள் சேதம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால், 5 வீடுகள் சேதமடைந்தன. எனினும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 02, 2025 18:22 IST
சிப்காட் தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம்
மதுரை மாவட்டத்தில் முதல் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்கு சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
-
Jun 02, 2025 18:20 IST
ஹெல்மெட் திருட்டு - சிசிடிவி ரிலீஸ்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட் திருடிச்சென்ற மர்ம நபர்கள் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
-
Jun 02, 2025 17:46 IST
கண்ணாடி பாலத்தை காண ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்
குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றை மே மாதத்தில் மட்டும் 3,13,000 சுற்றுலா பயணிகள் படகில் சென்று ரசித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jun 02, 2025 17:18 IST
பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்த எக்கல் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பலூன்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
-
Jun 02, 2025 16:32 IST
திண்டுக்கல் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா 2 மாதங்களில் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு
திண்டுக்கல் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா 2 மாதங்களில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் சிறுமலையில் பல்லுயிர் பூங்காவை திறக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர் பூங்காவை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
Jun 02, 2025 15:05 IST
உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!!
உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கிய ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெட்டிக் கடை நடத்தி வந்த பாண்டீஸ்வரி என்பவர், சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்துள்ளார்.
-
Jun 02, 2025 14:10 IST
முருகன் மீது உண்மையான பக்தி கொண்டவர்கள்; மதுரையில் நடக்கும் மாநாட்டுக்கு செல்ல மாட்டார்கள் - சேகர் பாபு
முருகன் மீது உண்மையான பக்தி கொண்டவர்கள்; மதுரையில் நடக்கும் மாநாட்டுக்கு செல்ல மாட்டார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
Jun 02, 2025 13:59 IST
சாலை விபத்தில் உயிரிழக்கும் திமுக உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க உறுப்பினர்கள் யாரும் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் மரணமடைந்தால், அவர்களின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்குக் குறைந்தவர்களாக இருக்கும்பட்சத்தில், திமுக தலைமை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jun 02, 2025 13:50 IST
மதுரை பந்தல்குடி கால்வாய் விவகாரம்: துணியைக் கட்டி மறைக்கும் பா.ஜ.க மாடல் அல்ல - மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “துணியைக் கட்டி மறைக்கும் பா.ஜ.க மாடல் அல்ல" என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் அவசியத்தை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "துணி மறைப்பு கட்டி உலகத் தலைவர்களிடம் இருந்து மறைக்கும் பா.ஜ.க மாடல் இதுவல்ல; மறைப்பை அகற்றி, உடனே முழு தீர்வுக்கான வழி செய்யும் திராவிட மாடல்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் மதுரை பந்தல்குடி கால்வாயை துணி கட்டி மறைத்ததாக செய்தி வெளியானதை உடனடியாக அகற்றச் சொன்னதாகவும், மாலையில் அந்தக் கால்வாயை பார்வையிட்டு துப்புரவுபடுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Jun 02, 2025 11:45 IST
நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jun 02, 2025 11:43 IST
வசிக்கும் கிராம மக்கள் கடும் அவதி
மானாமதுரை சிப்காட் பகுதியில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கடற்பாசி கழிவுகள் சட்டவிரோதமாக எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Read full story:
மானாமதுரை மக்களுக்கு மூச்சுத்திணறல்: கடற்பாசி கழிவு அலட்சியத்தால் ஆபத்து
-
Jun 02, 2025 09:37 IST
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - ஒருவர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டர். அவரிடமிருந்து அசாம் மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Jun 02, 2025 09:34 IST
கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை
கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலையூர் சாலையில் பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தனர். அரைமணி நேரத்திற்குள் செண்பா நகர் 3வது தெருவில் கஸ்தூரி என்ற பெண்ணை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொன்றனர்.
-
Jun 02, 2025 09:16 IST
பள்ளி திறப்பு: விமானங்களில் பல மடங்கு கட்டணம் உயர்வு
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மதுரை - சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,542. இன்றைய கட்டணம் ரூ.18,127, தூத்துக்குடி - சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,214. இன்றைய கட்டணம் ரூ.17,401 உயர்த்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.