Advertisment

சென்னையில் இருமல், சளி இருக்கும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus cases in tamil nadu covid 19 chennai reports - சென்னையில் இருமல், சளி இருக்கும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா

TN Latest News Live

இன்ஃப்ளூயன்சா போன்ற பாதிப்பு கொண்ட நபர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரத்தில் 20-30 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 4ம் தேதி நிலவரப்படி, காய்ச்சல் முகாமிற்கு வந்த 10,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஜுலை 4 வரை, சென்னை முழுவதும் மூன்றில் ஒரு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 8 முதல் ஜுலை 6 வரை, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 40,175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 35,937 பேரிடம் இருந்து ஸ்வாப் பெறப்பட்டுள்ளது.

கேரள அரசியலை ஆட்டம் காண வைக்கும் தங்க கடத்தல் வழக்கு... யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

பெறப்பட்ட அந்த ஸ்வாப்களில் மொத்தம் 10,463 பேருக்கு ஜுலை 4 வரை, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜுலை 4 வரை வரை 32,861 பேரிடம் இருந்து ஸ்வாப் பெறப்பட்டுள்ளது. அப்படியெனில், ஸ்வாப் பாசிட்டிவ் ரேட் 31.84 ஆகும்.

இன்ஃப்ளூயன்சா பாதிப்பு கொண்ட நபர்களில், மணலி, மாதவரம், ஆலந்தூர் மற்றும் பெருங்குடியைச் சேர்ந்தவர்க்ளுக்கே அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகள், சென்னையின் முக்கிய கொரோனா ஹாட்ஸ்பாட் இடங்கள் இல்லை என்பது ஆச்சர்யம் கொள்ளும் தகவலாகும்.

சென்னை பெருநகர ஆணையத்தின் கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில், "மணலி போன்ற பகுதிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள் இல்லை. மருத்துவர்கள் இருந்தால் தான், மக்கள் வெளியே வந்து பிரச்சனைகளை தெரிவிப்பார்கள். மருத்துவர்களின் இருப்பு அங்கு வித்தியாசங்களை ஏற்படுத்துகின்றன.

பதட்டங்களை தணிக்க வாங் - தோவல் பேச்சுவார்த்தையை முன்மொழியும் பெய்ஜிங்

செவ்வாய்க்கிழமை காலை வரை, 13,212 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் சென்னை மாநகராட்சி சார்பாக நடத்தப்பட்டுள்ளன. நாள் ஒன்று 100 முகாம்கள் என்பதில் தொடங்கி, மக்கள் வருகைக்கு ஏற்ப அதிகப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ சென்னை பெருநகர மாநகராட்சி அறிக்கையில், 'இந்த முகாமுக்கு வந்த பல நபர்களுக்கு 2-4 நாட்களாக தொண்டை வலியும், காய்ச்சலும் இருந்திருக்கின்றன. சிலர் தங்களுக்கு நுகரும் திறனும், சுவை அறிதலும் இரண்டு நாட்களுக்கு இல்லை என்று கூறினர். முகாமில் பணிபுரிந்த மருத்துவர்கள் நோயாளிகளின் ஆக்சிஜன் செறிவு, பல்ஸ் அளவு, சுவாச விகிதம் போன்றவற்றை சோதனை செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment