Corona Virus Today Reports in Tamil Nadu: தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 220 பேர் பலியாகியிருக்கிறார்கள். நோய் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது. தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருபத்தி ஏழாயிரம் தாண்டியது.
கோவிட்-19க்கு ஹோமியோ மருந்து குறித்து ஒரு விவாதம்
இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில், இன்று (ஜூன்.4) 1,384 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் குவைத்தில் இருந்தும், 5 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 4 பேர் தெலுங்கானாவில் இருந்தும், கேரளாவில் இருந்து ஒருவரும் வந்தவர்கள். மற்ற 1,373 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1072 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 16, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது வரை, 5,44,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதேபோல், இன்று வரை 15,991 பேருக்கும், மொத்தம் 5,20,286 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 783 பேர் ஆண்கள், 601 பேர் பெண்கள். தற்போது வரை 16,964 ஆண்களும், 10,278 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14,901 ஆகவும், இன்று மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 220 ஆகவும் அதிகரித்துள்ளது.
0-12 வயதுடையவர்களில் 1 506 பேரும், 13- 60 வயதுடையவர்களில் 23,084 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,712 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.